ராஜபக்சே முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்த வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன்!

Subscribe to Oneindia Tamil

CV Vigneswaran takes oath before Rajapaksa
கொழும்பு: இலங்கை அதிபர் ராஜபக்சே முன்னிலையில் வடக்கு மாகாண முதல்வராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் சிவி விக்னேஸ்வரன்.

இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடந்தது.

இதில் எல்டிடிஈ தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

இந்த கூட்டணியின் சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி சி வி விக்னேஸ்வரன், இன்று முதல்வராகப் பதவி ஏற்கும் நிகழ்ச்சி கொழும்பில் நடந்தது.

அதிபர் ராஜபக்சேவின் அலரி மாளிகையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர்கள் கலந்து கொண்டனர். விக்னேஸ்வரனின் குடும்பத்தினர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அதிபர் ராஜபக்சே முன்னிலையில் முதல்வராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார் விக்னேஸ்வரன்.

இதர அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் வரும் 11-ம் தேதி யாழ்ப்பாணத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்கின்றனர். இதிலும் இலங்கை அரசின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+