தமிழர் உரிமை குறித்து ராஜபக்சேவிடம் வலியுறுத்திய பிரிட்டிஷ் பிரதமர்!
கொழும்பு: இலங்கையில் சிறுபான்மைத் தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும், அவர்களின் நிலை மிக மோசமாக உள்ளது என்று இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் உறுதியாகத் தெரிவித்துள்ளார் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன்.
இந்த தகவலை பிரித்தானிய பிரதமரின் டௌனிங் வீதி அலுவலகம் வெளியிட்டுள்ளது.

டேவிட் கேமரூன் நேற்று யாழ்ப்பாணத்துக்கான தனது பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கையின் அதிபர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்தார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது .
அப்போது டேவிட் கமரூன் தமிழர் நிலை பற்றி தாம் நேரடியாகப் பார்த்ததையும் அதுபற்றிய தமது கருத்துக்களை நேரடியாகவும் உறுதியாகவும் ராஜபக்சேவிடம் தெரிவித்ததாக பிரிட்டிஷ் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் இறுதிப்போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் கேமரூன் ராஜபக்சேயிடம் வலியுறுத்தினார்.
அத்துடன் சர்வதேசத்தின் முன் உண்மையை கூறுவதே நல்லிணக்கத்துக்கு உதவும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பின் காமன்வெல்த் மாநாடு மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. எனினும் அரசியல் உரிமைகளை பாதுகாக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேமரூன் குறிப்பிட்டார.












Click it and Unblock the Notifications