காஷ்மீர் சிறுமி விவகாரம்: நியாயம் கேட்டு இலங்கையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
காஷ்மீர் மாநிலத்தில் கத்துவாவில் ஒரு சிறுமி கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், அவ்விவகாரத்துடன் தொடர்புடையவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்தும், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், இன்று புதன்கிழமை மதியம் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றில் ஈடுபட்டனர்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுமார் 1500 மாணவர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியினை, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்திருந்தது.
பல்கலைக்கழகத்தின் கலைப்பீட கட்டடத்தின் அருகிலிருந்து ஆரம்பமான இந்தப் பேரணி, பல்கலைக்கழக முன்றல் வரை சென்று திரும்பியது.
சிறுமி கொல்லப்பட்டமைக்கு இந்தப் பேரணியில் கலந்து கொண்டோர் தமது கண்டனங்களைத் தெரிவித்ததோடு, அவற்றினை வெளிப்படுத்தும் வகையிலான பல்வேறு முழக்கங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துக் குற்றவாளிகளும் கடுமையாகத் தண்டிக்கப்பட்டு, நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என இதில் கலந்து கொண்டோர் கோஷமெழுப்பினர்.
இந்த பேரணியின் இறுதியில், இலங்கைக்கான இந்திய தூதரக உயரதிகாரிக்கான மனுவொன்றினை, அவருக்கு அனுப்பி வைக்குமாறு கோரி, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறைத் தலைவர் கலாநிதி ரமீஸ் அபூபக்கரிடம் மாணவர்கள் சமர்ப்பித்தனர்.
இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றும் கல்விசாரா ஊழியர்கள் மார்ச் மாதம் தொடக்கம் முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமையின் காரணமாக, சுமார் 45 நாட்கள் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இலங்கையின் அனைத்துப் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இருந்தபோதும், கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வந்து, அவர்கள் கடமைக்குத் திரும்பியதையடுத்து நேற்று முன்தினம் திங்கட்கிழமை, பல்கலைகக்கழகத்துக்கு மாணவர்கள் வரத் தொடங்கினர்.
இந்த நிலையிலேயே, காஷ்மீர் சிறுமி விடயத்தில், நீதி நிலைநாட்டப் படவேண்டுமெனக் கோரி, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.
பிற செய்திகள்:
- இனி தமிழ் மொழியிலும் ரயில் டிக்கெட்
- மாணவர்களை கொலை செய்து உடலை அமிலத்தில் கரைத்த கும்பல்
- காவிரியை விட மெரீனா கடற்கரை முக்கியமா: அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
- சச்சின் சதமடித்த போட்டிகளில் இந்தியா வென்றது எத்தனை?
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்














Click it and Unblock the Notifications