பிரபாகரன் சிறந்த ஆலோசகர்: சொல்கிறார் இலங்கை அமைச்சர்

கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரேரா, ஆலோசனைகள் தொடர்பான செயலகம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்றை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசு சார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆலோசனை சேவைகளை ஒரு நிறுவனத்தின் கீழ் கொண்டு வந்து பொது கொள்கைகளை வகுத்து அதனை செயற்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
என்னை பொறுத்தவரையில் பிரபாகரனும் சிறந்த ஆலோசகர். அவர் சிறந்த ஆலோசகர் என்பதன் காரணமாகவே, உடலில் வெடி குண்டை கட்டி தாக்குதல் நடத்தும் பயிற்சிகளை கொடுத்து அதனை நிறைவேற்றும் இடத்திற்கு நகர்த்தினார்.
அரசியலுக்கு வருபவர்களுக்கும் இன்று ஆலோசனைகளை வழங்க வேண்டியுள்ளது. அரசியல் கொள்கை, அனுபவம், எதற்கு அரசியலுக்கு வந்தார்கள் என்பது குறித்து புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும்.
நடிகர்கள், நடிகைகளும் அரசியலுக்கு வந்துள்ளனர். அவர்களுக்கும் ஆலோசனை வழங்குவது முக்கியமானது என்று தெரிவித்தார்.











Click it and Unblock the Notifications