நான் வென்றால்..தமிழர் பகுதியில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற மாட்டேன்: மைத்ரிபால சிறிசேன
கொழும்பு: அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் தமிழர் பகுதியில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற மாட்டேன் என்று இலங்கை எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்ரிபால சிறிசேன கூறியுள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான இறுதி கட்ட பிரசாரம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தது.

பிரசாரத்துக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய மைத்ரிபால சிறிசேன, அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் வடக்கில் இருந்து ராணுவத்தை விலக்கமாட்டேன்.
இந்த மண்ணில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் தலை தூக்க விடமாட்டேன். நாட்டின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
அதிகாரத்தை பகிர்வது தொடர்பாக சிறுபான்மை கட்சிகளுடன் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. பௌத்த மதத்திற்கு முன்னுரிமை தரும் அதே நேரத்தில் இதர மதத்தினருக்கும் உரிய முக்கியத்துவம் வழங்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications