ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் தலைமையில் 'ஐக்கிய தேசிய முன்னணி' உதயம்! சிறிசேன ஆதரவு!!
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் மூலம் மீண்டும் அரசியல் பிரவேசம் மேற்கொண்டிருக்கும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையில் 'ஐக்கிய தேசிய முன்னணி' உதயமாகியுள்ளது. இதற்கு அதிபர் மைத்ரிபால சிறிசேன ஆதரவளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை அதிபர் தேர்தலில் படுதோல்வி அடைந்த மகிந்த ராஜபக்சே பல மாதங்களாக தீவிர அரசியலைவிட்டு ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் 17-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த அதிருப்தியாளர்கள் அனைவரும் வரும் தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி சின்னமான யானை சின்னத்தில் போட்டியிடவும் முடிவு செய்துள்ளனர்.
மேலும் இந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிருப்தியாளர்கள், ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி, ஜாதிக ஹெல உறுமய, மற்றும் இடதுசாரிக் கட்சிகள் ஆகியவை இணைந்து ஐக்கிய தேசிய முன்னணி என்ற புதிய கூட்டமைப்பையும் உருவாக்கி உள்ளனர். இந்த கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் கொழும்பில் நேற்று ராஜபக்சே எதிர்ப்பாளர்கள் கையெழுத்திட்டனர்.
இந்த புதிய கூட்டணிக்கு அதிபர் மைத்ரிபால சிறிசேன முழு ஆதரவை அளித்துள்ளதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications