விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வுப் பொறுப்பாளர் ஆதவன் மாஸ்டர் கைது
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் புலனாய்வுப் பொறுப்பாளர் ஆதவன் மாஸ்டர் இலங்கை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான இறுதி யுத்தம் நடைபெற்ற காலத்தில் மன்னார், வன்னி பிரதேசங்களின் புலனாய்வுப் பொறுப்பாளராக இருந்தவர் ஆதவன் மாஸ்டர். யுத்தம் முடிவடைந்த நிலையில் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்திருந்தார்.

பின்னர் இலங்கை ராணுவப் புலனாய்வுப் பிரிவினருடன் அவர் இணைந்து செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் அண்மையில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் முன்னாள் பொறுப்பாளர்கள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு வர முயற்சித்த போது ஆதவன் மாஸ்டரை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சித்ததாக கூறப்படுவது குறித்து ஆதவன் மாஸ்டரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications