இலங்கையில் மோடி சுற்றுப் பயணம்.. அதிபர் சிறிசேனாவுடன் சந்திப்பு.. இரவு விருந்தில் பங்கேற்பு
இலங்கை அதிபர் சிறிசேனாவை அவரது மாளிகையில் மோடி சந்தித்தார். அங்கு, மோடிக்கு இரவு விருந்து பரிமாறப்பட்டது. வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனும் அதில் பங்கேற்றார்.
கொழும்பு: பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் 2 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
புத்த மதத்தினர் புத்தரின் பிறந்தநாள், ஞானோதயம் பெற்ற நாள், உயிர் நீத்த நாள் ஆகிய மூன்றையும் 'வெசாக்' அதாவது, புத்த பூர்ணிமா தினம் என்ற பெயரில் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.
ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள புத்த பூர்ணிமா கொண்டாட்டங்கள் வெள்ளிக்கிழமை முதல் 14ந் தேதி வரை கொழும்பு நகரில் 3 நாட்கள் நடக்கிறது. புத்த பூர்ணிமா திருவிழாவில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

இதில் பங்கேற்பதற்காக அவர் இன்று கொழும்பு நகருக்கு புறப்பட்டுச் சென்றார். சர்வதேச வெசாக் தின கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளவும், இந்திய நிதி உதவியுடன் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை திறந்து வைக்கவும், தமிழர்களை சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
கொழும்பு விமான நிலையத்தில், பிரதமர் மோடியை, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நேரில் சென்று வரவேற்றார்.
கொழும்பை வந்தடைந்து விட்டேன். இலங்கைக்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது, இங்கே சர்வதேச வெசாக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வேன். pic.twitter.com/vtoeSloutV
— Narendra Modi (@narendramodi) May 11, 2017
"கொழும்பை வந்தடைந்து விட்டேன். இலங்கைக்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது, இங்கே சர்வதேச வெசாக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வேன்" என மோடி அப்போது தமிழிலேயே டிவிட் செய்தார்.
இதன்பிறகு பழமையான புத்தமத கோயிலுக்கு மோடி விஜயம் செய்தார்.
இலங்கையில் எனது நிகழ்ச்சிகள் அமைதியும் நேர்மறை ஆற்றலும் நிரம்பிய சீமா மாலக்க பௌத்த கோவிலிற்கான ஒரு விஜயத்துடன் ஆரம்பிக்கிறது. pic.twitter.com/lZ9egyJxCa
— Narendra Modi (@narendramodi) May 11, 2017
"இலங்கையில் எனது நிகழ்ச்சிகள் அமைதியும் நேர்மறை ஆற்றலும் நிரம்பிய சீமா மாலக்க பௌத்த கோவிலிற்கான ஒரு விஜயத்துடன் ஆரம்பிக்கிறது." என தமிழிலேயே டிவிட் செய்திருந்தார் மோடி.
Delighted to meet President @MaithripalaS in Colombo. pic.twitter.com/Ubh7tYIXUk
— Narendra Modi (@narendramodi) May 11, 2017
இதன்பிறகு, அதிபர் சிறிசேனாவை அவரது மாளிகையில் மோடி சந்தித்தார். அங்கு, மோடிக்கு இரவு விருந்து பரிமாறப்பட்டது. வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனும் அதில் பங்கேற்றார்.












Click it and Unblock the Notifications