"தலைவர்" எம்.ஜி.ஆர்.. இலங்கையில் நின்று கொண்டு புகழ்ந்த மோடி!
இந்தியாவின் தேசிய தலைவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இந்த மண்ணில் பிறந்தவர் என்று இலங்கையில் பேசிய மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
நுவரெலியா: புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இந்த மண்ணின் மைந்தர். அவர் இந்தியாவின் தேசியத் தலைவர் என்று இலங்கை நுவரெலியாவில் மலையக தமிழர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
இலங்கை பயணத்தை முன்னிட்டு தமிழில் டுவிட்டிய மோடி, இன்று மலையக தமிழர்கள் மத்தியில் பேசிய போதும், தமிழர்களுக்கும், தமிழுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் பேசினார்.

இந்தியா வம்சாவளியினர்
புலம் பெயர்ந்த இந்திய வம்சாவளியினரின் வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியா - இலங்கையின் முக்கிய இணைப்பாக மலையக தமிழர்கள் விளங்குகிறார்கள். கடின உழைப்பாளிகள் என்பதை உணர்த்தியுள்ளனர்.

இந்தியா - இலங்கை உறவு
இலங்கையின் கல்வி, பொருளாதார திட்டங்களுக்கு இந்தியா உதவுகிறது. 700 இலங்கை மாணவர்களுக்கு இந்தியா கல்வி உதவித்தொகை வழங்குகிறது. இந்தியா - இலங்கை உறவை மேலும் வலுப்படுத்திடுவது தனது கடமை ஆகும்.

இந்தியா ஒத்துழைப்பு
இலங்கை அரசுடன் இந்தியாவும் இணைந்து இந்திய வம்சாவளியினரின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்து வருகிறது. மலையக தமிழர் வாழ்க்கை தரத்தை உயர்த்த இந்தியா ஒத்துழைப்பு தரும்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர்
தமிழக முதல்வராக இருந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இந்த மண்ணைச் சேர்ந்தவர். இந்தியாவின் தேசிய தலைவராக விளங்குகிறார் எம்ஜிஆர். எனவேதான் இந்த மண்ணிற்கும் இந்தியாவிற்கும் ஒரு பந்தம் இருக்கிறது என்றேன்.

முத்தையா முரளிதரன்
இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்த சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் உலகிற்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய பரிசு. அது மலையக மக்கள் அளித்த மிகச்சிறந்த பரிசுகளில் ஒன்று என்றும் புகழாரம் சூட்டியுள்ளார் பிரதமர் மோடி.












Click it and Unblock the Notifications