நிக்கிற ரயில் வேணாம்… ஒடுற ரயிலை மறிங்க: எழும்பூர், சென்ட்ரலில் கைதானோர் விடுதலை
சென்னை: காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதூவில் அணைகட்டுவதை எதிர்த்து சென்னை எழும்புரில், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
கர்நாடக அரசு காவிரி அணையின் குறுக்கே இரண்டு அணைகளை கட்டும் திட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் இன்று விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

சென்னை எழும்பூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக தி.மு.க., காங்கிரஸ், த.மாகா., ம.தி.மு.க., மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் மற்றும் விவசாய அமைப்பினர் எழும்பூர் ரயில் நிலைய பிரதான வாயில் முன்பு திரண்டனர். போராட்டத்துக்கு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார்.
9.30 மணியளவில் போராட்டம் தொடங்கியது. அப்போது தி.மு.க. துணை பொது செயலாளர் வி.பி.துரைசாமி மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.கே.சேகர்பாபு, த.மா.கா. சார்பில் சைதை ரவி முனைவர் பாட்சா, ம.தி.மு.க. துணை பொது செயலாளர் மல்லை சத்யா, மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா, விடுதலை கட்சி சார்பில் உச்சேஸ்வரன், சிவாஜி சமூக நல பேரவை தலைவர் சந்திரசேகரன் உள்பட பலர் பேசினார்கள்.

நிற்கும் ரயில் முன்பு
பின்னர் அனைவரும் ரயில் மறியல் செய்வதற்காக எழும்பூர் ரயில் நிலையத்துக்குள் சென்றனர். 7-வது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு மறியல் செய்ய போலீசார் அனுமதி அளித்தனர்.

மன்னார்குடி ரயில்
ஆனால் அது மாலையில் புறப்படும் ரயில் என்பதை அறிந்ததும் 6-வது பிளாட்பாரத்தில் மன்னார்குடி செல்வதற்கு தயாராக இருந்த ரயிலை நோக்கி ஓடினார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் குவிந்ததால் போலீசாரால் எதுவும் செய்யமுடியவில்லை.
விலகு விலகு....
ரயில் என்ஜின் மீது ஏறி நின்றும், தண்டவாளத்தில் அமர்ந்தும் மறியலில் ஈடுபட்டனர். கர்நாடக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இந்த ரயில் 10.40 மணிக்கு மன்னார்குடிக்கு புறப்பட வேண்டும். 10.50 மணியில் இருந்து என்ஜின் டிரைவர் தொடர்ந்து ஹாரன் அடித்தார். ஆனால் மறியல் செய்தவர்கள் யாரும் விலகவில்லை.

குண்டு கட்டாக தூக்கி
போலீசார் ஒரு புறத்தில் வலுக்கட்டாயமாக தொண்டர்களை தூக்கிச் சென்று அப்புறப்படுத்தினார்கள். ஆனால் இன்னொரு புறத்தில் ஏறி குதித்து மறியல் செய்தனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். சுமார் அரைமணிநேரம் நடைபெற்ற போராட்டம் காரணமாக 11.20 மணிக்கு அந்த ரயில் புறப்பட்டு சென்றது.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில்
இதேபோல் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications