இந்தியாவுக்கு 'நன்றிக்கடன்' செலுத்த தமிழக மீனவர்களை விடுவிக்கிறாரா ராஜபக்சே?
கொழும்பு: நேற்று இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்து தான் இலங்கைக்கு 'விசுவாசமாக' இருப்பதை உறுதி செய்ததற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாகவே இலங்கைச் சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் ராஜபக்சே விடுவிக்க உத்தரவிட்டுள்ளதாக கருதப்படுகிறது.
எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வருகின்றனர். அவ்வாறு கைது செய்யப்படும் மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக இருநாட்டு மீனவர்களுக்கு இடையேயான பேச்சு வார்த்தை நடந்தது. அதனைத் தொடர்ந்து இலங்கைச் சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் சிலர் விடுதலை செய்யப் பட்டனர்.

இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருந்த சூழ்நிலையில் மீண்டும் இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களைக் கைது செய்தது. இதனால் அப்பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று ஜெனிவாவில் நடைபெற்று வரும் சர்வதேச மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா புறக்கணிப்பதாக அறிவித்தது.
இதைத் தொடர்ந்து இதுவரை மீனவர் விடுதலை குறித்து வாயே திறக்காமல் இருந்து வந்த இலங்கை அரசு திடீரென சிறைகளில் இருக்கும் 98 தமிழக மீனவர்கள் விடுதலை செய்வதாக அறிவித்துள்ளது. அதற்கான உத்தரவை அதிபர் மகிந்த ராஜபக்சே பிறப்பித்துள்ளார்.
இந்த தகவலை அதிபரின் செய்தி தொடர்பாளர் ஹெரத் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் விடுதலைக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு இலங்கை மீன் வளத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க மாநாட்டை இந்தியா புறக்கணித்ததற்கு நன்றிக் கடனாகவே தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications