புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தை ஜப்பான் தொழிலதிபருக்கு விற்றார் மகிந்த ராஜபக்சே?
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் ஒரு பகுதியை ஜப்பான் நாட்டு தொழிலதிபருக்கு அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சே விற்பனை செய்ததாக திடுக்கிடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது இயக்கத்துக்காக பொதுமக்களிடம் இருந்து தங்க நகைகளைப் பெற்று தங்கமாக வைத்திருந்ததாக கூறப்படுவது உண்டு. தற்போது இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில் விடுதலைப் புலிகளை முன்வைத்து தீவிரமான பிரசாரம் நடைபெற்று வருகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மகிந்த ராஜபக்சே பணம் கொடுத்தே தேர்தலில் வெற்றி பெற்றார் என்ற பரபரப்பான குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்துக்குப் பின்னர் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் ஒருபகுதியை ஜப்பான் நாட்டு தொழிலதிபருக்கு மகிந்த ராஜபக்சே விற்றுவிட்டதாக ஜனநாயகக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஊவதென்னே சுமண தேரர் என்பவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று கூறியதாவது:
புலிகளின் தங்கத்தை ஜப்பான் வர்த்தகருக்கு மகிந்த ராஜபக்சே விற்பனை செய்ததற்கான ஆதாரமும் ஆவணங்களும் என்னிடம் இருக்கிறது. இதை நிதி மோசடி விசாரணைப் பிரிவிடம் கொடுக்க இருக்கிறேன்.
இந்த தங்கம் விற்பனையில் மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே மற்றும் மகிந்த ராஜபக்சேவின் அணியைச் சேர்ந்த காமினி செனரத், முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோருக்கும் தொடர்பிருக்கிறது.
கொழும்பில் உள்ள இராணுவ தலைமையகத்தில் இரண்டு பெரிய பெட்டிகளில் புலிகளின் தங்கம் வைக்கப்பட்டிருந்தது.
அவை 16 முறை பகுதி பகுதியாக கப்பலில் ஏற்றப்பட்டன. இந்த தங்க விற்பனை தொடர்பான சட்ட ரீதியான தன்மையை அறிந்து கொள்ள நாட்டு மக்களுக்கு உரிமை உள்ளது.
இவ்வாறு சுமண தேரர் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications