மோடியின் அழைப்புக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்த ராஜபக்சே!
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: டெல்லியில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்ததற்கு நரேந்திர மோடிக்கு ட்விட்டரில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே நன்றி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் 26-ந் தேதி நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் ராஜபக்சேவை அழைக்க தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் சீனாவில் இருந்து நேற்று கொழும்பி திரும்பிய ராஜபக்சே, நரேந்திர மோடியின் அழைப்புக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
அத்துடன் தாம் பதவி ஏற்பு விழாவில் கண்டிப்பாக கலந்து கொள்வேன் என்றும் உறுதியளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications