ராஜபக்சே தங்கச்சி தோத்துப் போயிட்டாங்களாமே... சொந்த ஊரில் போட்டியிட்டவர்!
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சேவின் தங்கை நிரூபமா தோல்வியைத் தழுவியுள்ளார்.
இலங்கையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அடுத்து யார் ஆட்சி அமைக்கப் போவது என்பது இன்னும் தெளிவாகவில்லை. ராஜபக்சே மற்றும் ரணில் விக்கிரமசிங்கே இருவரது தலைமையிலான கூட்டணி மாறி மாறி தொகுதிகளைக் கைப்பற்றி வருகிறது.

இந்த நிலையில் ராஜபக்சேவின் தங்கை நிரூபமா ராஜபக்சே தனது சொந்த ஊரிலேயே தோல்வியைத் தழுவியுள்ளார். ராஜபக்சே கட்சிக் கூட்டணி சார்பாக நிரூபமா ஹம்பந்தோட்டா தொகுதியில் போட்டியிட்டார். இது ராஜபக்சே குடும்பத்தினரின் சொந்த ஊராகும். இங்கு நிரூபமா அதிர்ச்சிக்குரிய வகையில் தோல்வியைத் தழுவினார்.
அதேசமயம், ராஜபக்சேவின் மகன்களான சமல் ராஜபக்சே, நமல் ராஜபக்சே ஆகியோரும் ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த இதரர்களும் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications