ராஜிவ் காந்தியை துப்பாக்கியால் அடித்த இலங்கை ராணுவ வீரர் "பி.ஜே.பி." வேட்பாளராக தேர்தலில் போட்டி!
கொழும்பு: முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியை துப்பாக்கிக் கட்டையால் அடித்த இலங்கை ராணுவ வீரர் விஜேமுனி இம்முறையும் அந்நாட்டு நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
1987ஆம் ஆண்டு பிரதமராக இருந்த ராஜிவ் காந்தி, இலங்கைக்கு சென்றிருந்தார். அப்போது அந்நாட்டின் முப்படை அணிவகுப்பு மரியாதை ராஜிவுக்கு கொடுக்கப்பட்டது.
அதில் கடற்படை வீரர் விஜித ரோஹண விஜேமுனி, திடீரென தாம் துப்பாக்கிக் கட்டையை தலைகீழாக பிடித்தபடி ராஜிவ் பின் தலையில் ஓங்கி அடித்தார். இருப்பினும் யதேச்சையாக ராஜிவ் கீழே குனிந்து கொள்ள உயிர் தப்பினார்.
இந்த விஜேமுனி பின்னர் அரசியலில் குதித்துப் பார்த்தார். பெரியளவுக்கு எதுவும் கைகொடுக்கவில்லை. தற்போதும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடுகிறார். பொதுஜன பெரமுண (பி.ஜே.பி) என்ற கட்சியின் வேட்பாளராக கொழும்பு மாவட்டத்தில் விஜேமுனி களமிறங்கியுள்ளார்.