சென்னையில் ரூ. 5 கோடி மதிப்பிலான போதை பொருள் சிக்கியது.. 4 பேர் கைது
சென்னையில் ரூ. 5 கோடி மதிப்பிலான போதை பொருள் இன்று பறிமுதல் செய்யப்பட்டது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் இருந்து மலேசியாவிற்கு தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை கடத்த முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கடத்தல் சம்பவங்களில் ரூ.5 கோடி மதிப்பு போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக போலீஸ் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை, மண்ணடி பகுதியில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது மலேசியாவிற்கு விமானம் மூலம் கடத்தவிருந்த போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு 5 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போதைப் பொருளை கடத்த முயன்றதாக சிராஜ்தீன், சையத் முசாபர், சதீஷ், பாக்கியகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications