தமிழர் கழுத்தை அறுப்பேன் என மிரட்டிய சிங்கள ராணுவ அதிகாரியை சஸ்பென்ட் செய்வதா? சிறிசேன பாய்ச்சல்
லண்டனில் ஈழத் தமிழர்களது கழுத்தை அறுத்து போடுவேன் என மிரட்டிய சிங்கள ராணுவ அதிகாரியை சஸ்பென்ட் செய்ததற்கு இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
Recommended Video

கொழும்பு: லண்டனில் ஈழத் தமிழர்களது கழுத்தை அறுத்து போடுவேன் என மிரட்டிய சிங்கள ராணுவ அதிகாரியை சஸ்பென்ட் செய்ததற்கு இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர் ஈழத் தமிழர்கள். அவர்களை இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் ராணுவ அதிகாரி பெர்னாண்டோ கழுத்தை அறுத்து வீசுவோம் என சைகையில் மூன்று முறை மிரட்டினார்.

இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையானது. பெர்னாண்டோவை இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்த வேண்டும் என அந்நாட்டு எம்பிக்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து பெர்னாண்டோவை இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் சஸ்பென்ட் செய்தது. ஆனால் இந்த சஸ்பென்ட் உத்தரவை அதிபர் மைத்ரிபால சிறிசேன ரத்து செய்தார்.
அத்துடன் சஸ்பென்ட் உத்தரவை பிறப்பித்தவர்கள் மீதும் கடும் கோபத்தை வெளிப்படுத்தினார் சிறிசேனா. இதனிடையே சிங்கள ராணுவ அதிகாரியின் கொலை மிரட்டல் பிரிட்டன் சட்டப்படி குற்றம் என மூத்த பத்திரிகையாளர் கெல்லும் மக்ரே கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications