காமன்வெல்த் மாநாட்டில் போர்ககுற்றம் பற்றிப் பேசக் கூடாது.. இங்கிலாந்துக்குத் தடை?
கொழும்பு: இலங்கையில் நேற்று காமன்வெல்த் மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டின்போது இலங்கையில் நடந்த போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் குறித்துப் பேசுவேன் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கூறியிருந்தாலும், அதை எழுப்பக் கூடாது என்று இலங்கை தரப்பிலிருந்து அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் நேற்று 22வது காமன்வெல்த் உச்சி மாநாடு தொடங்கியது. இதை அதிபர் ராஜபக்சே தொடங்கி வைத்தார். இது இளைஞர் மாநாடாக, மக்கள் மன்ற மாநாடாக நடைபெறுகிறது.
காமன்வெல்த் மாநாட்டில் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும், கண்காணிப்பாளர்களும், செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், காமன்வெல்த் மாநாட்டில் இலங்கையின் போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் குறித்துப் பேசுவேன் என்று இங்கிலாந்து பிரதமர் கேமரூன் கூறியிருந்தார்.
ஆனால், நிகழ்ச்சி நிரலுக்கு முரணாக பேச இங்கிலாந்துக்கு அனுமதி கிடையாது என்று இலங்கை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இலங்கை போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கருத்தை முன்வைக்க இங்கிலாந்து பிரதமர் கேமரூன் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.
இதையடுத்து இலங்கை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் மாநாட்டின்போது இலங்கை இங்கிலாந்து இடையேயான நட்புறவு குறித்தும் பேச வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications