என்னுடைய தினசரி செலவுக்கு ரூ. 2 கோடி... தனக்குத் தானே ஒதுக்கிக் கொண்ட ராஜபக்சே!
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் அந்த நாட்டுக்கான 2014ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். அதில் ராஜபக்சேவின் ஆண்டு செலவுக்காக ரூ. 857 கோடியை ஒதுக்கியுள்ளனர். அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக ரூ. 2 கோடி வரை அவருக்காக செலவிடப்போகிறார்களாம்.
என்ன காமெடி என்றால் இந்த பட்ஜெட்டைத் தாக்கல் செய்தவரே ராஜபக்சேதான். அதாவது அவர்தான் அந்த நாட்டின் நிதித்துறையில் கையில் வைத்திருக்கிறாராம். இதனால் தனக்கான செலவுக்கு பை நிறைய பணத்தைப் போட்டு நிரப்பி அதை முறைப்படி நாடாளுமன்றத்திலும் பட்ஜெட் மூலமாகவும் அறிவித்துள்ளார்.
ராஜபக்சேவின் இந்த அடாவடி நிதி ஒதுக்கீட்டை அங்குள்ள எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன.

2014 பட்ஜெட்
இலங்கை நாடாளுமன்றத்தில் 2014ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை ராஜபக்சே தாக்கல் செய்து பெரிய உரையும் நிகழ்த்தினார்.

ஐக்கிய தேசிய கட்சி, ஜனதா விமுக்தி பெரமுனா புறக்கணிப்பு
ராஜபக்சேவின் இந்த பட்ஜெட்டையும், அவரது பேச்சையும் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, ஜனதா விமுக்தி பெரமுனா ஆகியவை புறக்கணித்து விட்டன.

காமன்வெல்த்துக்காக பெருமைப்படுவதாக பேச்சு
பட்ஜெட் உரையின்போது காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் வெற்றிகரமாக நடத்தியதற்காக பெருமைப்படுவதாக சிரித்துக் கொண்டே கூறினார் ராஜபக்சே.

பட்ஜெட்டில் தனக்கு மட்டும் 857 கோடி ஒதுக்கீடு
இந்த பட்ஜெட்டில் ராஜபக்சேவின் வருடாந்திர செலவுகளுக்காக ரூ. 857 கோடியை ஒதுக்கியுள்ளனர்.

அதாவது ஒரு நாளைக்கு ரூ. 2 கோடி
அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு அவருக்கு ரூ 2 கோடியை செலவிடப்போகிறார்களாம்.

இங்கிலாந்து ராஜ குடும்பத்தையும் மிஞ்சி விட்டார்
இங்கிலாந்தில் ராஜ குடும்பத்துக்கே ஆண்டு செலவாக வருடத்திற்கு இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ. 850 கோடிதான் ஒதுக்கிறார்கள். ஆனால் அதை விட தனக்கு அதிகமாக ஒதுக்கி ராஜாக்களையும் மிஞ்சி விட்டார் இந்த ராஜபக்சே.

வளர்ச்சிக்கான பட்ஜெட்டாம்
ஆனால் இந்த பட்ஜெட்டை வளர்ச்சிக்கான பட்ஜெட் என்று அந்த நாட்டு அரசாங்கம் வர்ணித்துள்ளது.
சிங்களர்களும் பாவம்தான்...!












Click it and Unblock the Notifications