புத்தர் உருவ பச்சை குத்திய பிரிட்டிஷ் பெண்ணை நாடு கடத்திய இலங்கை
கொழும்பு: புத்தர் உருவத்தை கையில் பச்சை குத்தியிருந்த பிரிட்டீஷ் பெண்ணை கைது செய்ததுடன் நாட்டை விட்டு வெளியேற்ற இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இச்சம்பவம் இலங்கை செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தாமரை மலர் மீது புத்தர்
நவோமி மிஷேல் கோல்மென் என்ற பிரிட்டீஷ் பெண்மனி, திங்கள்கிழமை இந்தியாவில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு விமானத்தில் சென்றார். விமான நிலையத்தில் அவரை குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டபோது அவரின் வலது கையில் தாமரை மலர் மீது புத்தர் அமர்ந்திருப்பது போன்ற உருவம் பச்சை குத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

அன்பும் குற்றமா
இலங்கையை பொறுத்தளவில் புத்தருக்கோ, பவுத்தமதத்துக்கோ சிறிதளவு இழுக்கு ஏற்படும் செயலையும் அனுமதிப்பதில்லை. எனவே பச்சை குத்திக்கொண்ட குற்றத்திற்காக பிரிட்டீஷ் பெண்மணி கைது செய்யப்பட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

நாட்டைவிட்டு வெளியேறு
அந்த பெண்ணை இலங்கையை விட்டே வெளியேற்றும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
நாட்டை விட்டு வெளியேற்றும் நடைமுறைகள் முடியும் வரை முகாம் ஒன்றில் அவர் தங்கவைக்கப்பட்டுள்ளார். அவருக்கு தேவையான உதவிகளை செய்து வருவதாக இலங்கைக்கான பிரிட்டீஷ் தூதரகம் தெரிவித்துள்ளது.

இவங்க இப்படித்தான்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் சிலையை முத்தமிட்டதற்காக பிரெஞ்சு சுற்றுலா பணிகள் மூவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. 2010ம் ஆண்டில் அமெரிக்க ராக் இசைக்கலைஞர் அகோன் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அவர் தனது ஆல்பம் ஒன்றில் புத்தர் சிலைக்கு முன்பாக பெண்ணை நடனமாடச் செய்து காட்சியமைத்திருந்ததால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது நினைவு கூறத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications