சிங்கள இனவாதத்தை தூண்டி ஆட்சியில் அமர நினைக்கும் ராஜபக்சே: அர்ஜூன ரணதுங்கா அட்டாக்
கொழும்பு: மகிந்த ராஜபக்சே இனவாதத்தை தூண்டி ஆட்சியில் அமர நினைக்கிறார். அதற்கு யாரும் துணைபோகக்கூடாது என அர்ஜூன ரணதுங்க கூறியுள்ளார். தேர்தல் பிரச்சார களத்தில் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக பலமுனை தாக்குதல் நிகழ்த்தப்படுவதால் வெற்றி வாய்ப்பு குறித்து சற்றே சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு ஆகஸ்ட் 17 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்காக இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டது. அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
தற்போது பிரதமராக பதவி வகிக்கும் ரணில் விக்ரமசிங்கே, ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் களமிறங்குகிறார். எதிர்முனையில் நாடாளுமன்ற உறுப்பினராக பலர் போட்டியிட்டாலும், சுதந்திரக் கட்சியின் சார்பில் குருனெகல தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேதான் பிரதமர் ரேஸில் இருக்கிறார். வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவோம் முழக்கத்துடன் சிங்களர்களைக் குறிவைத்து இறங்கியுள்ளது ராஜபக்சே தரப்பு.

ரணில் தரப்புக்கு வாய்ப்பு
சமீபத்தில் சென்டர் பாலிசி ஆல்டர் நேட்டிவ்ஸ் என்ற நிறுவனம் இலங்கையில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்று கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில் ரணில் விக்ரமசிங்கேவின் கை தான் ஓங்கியிருக்கிறது. இதேநேரத்தில் சிங்களர்கள் வசிக்கும் பகுதிகளில் ராஜபக்சேவுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது.

117 இடங்கள் உறுதி
தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் ராஜபக்சேவின் இமேஜ் அப்படியே இருப்பதால் 117 இடங்களில் வெற்றி பெற்று பிரதமர் ஆவேன் என்று கூறி வருகிறார் மகிந்த ராஜபக்சே.

எப்படி சாத்தியம்
தமிழர் மற்றும் முஸ்லீம் மக்களுக்கு எதிர்ரான நடவடிக்கைகள் மூலம் சிங்கள வெறியை தூண்டியதற்கு கிடைத்திருக்கும் ஆதரவு இது என்று ஈழத்தமிழ் ஆதரவாளர்களும், இனவாதத்திற்கு எதிரானவர்களும் கூறி வருகின்றனர்.

அர்ஜூன ரணதுங்க தாக்குதல்
தேர்தலுக்கான நாட்கள் நெருங்க நெருங்க பிரச்சாரமும் சூடுபிடித்துள்ளது. பிரச்சார களத்தில் பேசிய அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, மகிந்த ராஜபக்சே இன்னமும் பதவி ஆசை கொண்டு ஆட்சியில் அமர நினைப்பது வெட்கக் கேடான செயல் என்று கூறியுள்ளார்.

இனவாதத்தை தூண்டுவதா?
கடந்த அதிபர் தேர்தலில் பெற்ற வெற்றியை தக்க வேண்டும். தோற்றுப்போன மகிந்த ராஜபக்சே நிழல் போலத் தொடர்ந்து ஆட்சி பீடமேற நினைக்கிறார். மகிந்த ராஜபக்சே இனவாத்தை தூண்டி ஆட்சியில் அமர நினைக்கிறார். அதற்கு யாரும் துணைபோகக்கூடாது என அர்ஜூன ரணதுங்க கூறியுள்ளார்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications