சிறிசேனாவை கொல்ல திட்டம்.. ராவின் பிளானை விசாரிக்கும் ''ஹவாய்'' போன் நிறுவனம்.. பின்னணி என்ன?
கொழும்பு: இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை கொலை செய்ய நடந்த திட்டம் குறித்து சீனாவின் ஹவாய் போன் நிறுவனம் விசாரணை நடத்த உள்ளது.
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை இந்தியா கொலை செய்ய முயற்சி செய்வதாக இலங்கை அரசு கடந்த வாரம் குற்றச்சாட்டு வைத்தது. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியாவின் உளவு அமைப்பான ரா அமைப்பு, அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை கொலை திட்டமிட்டுள்ளது. ஆனால் மோடிக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

தகவல் அளித்தவர்
இந்த தகவல்கள் அனைத்தையும் வெளியே கொண்டு வந்தவர் நமல் குமாரா என்ற நபர்தான். நமல் குமாரா அதிபர் சிறிசேனாவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டு இருக்கும் ரகசிய நபர். இவர் அளித்த தகவலின் மூலம்தான் ரா, சிறிசேனவை கொலை செய்ய முயற்சி செய்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டது.

உதவி கேட்டது
இவர் வைத்திருந்த ஹவாய் போனில் இதற்கான அனைத்து தகவல்களும் அடங்கி உள்ளது. ரா உளவாளிகள் சிறிசேனவை கொலை செய்ய திட்டமிட்டது, இந்திய அதிகாரிகளிடம் இவர் பேசியது என்று அனைத்து விவரங்களும் இதில் இருந்துள்ளது. ஆனால் அனைத்து விவரங்களும் தற்போது ஹவாய் போனில் இருந்து டெலிட் ஆகியுள்ளது. போனில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இது டெலிட் ஆகியுள்ளது.

விசாரிக்க உள்ளது
இந்த நிலையில் இந்த தகவல்களை வெளியே எடுக்க இலங்கை அரசு திட்டமிட்டு இருக்கிறது. அதற்காக ஹவாய் நிறுவனத்திடம் இலங்கை அரசு உதவி கேட்டுள்ளது. ஹவாய் நிறுவனம் இதுகுறித்து விசாரணை நடத்த தனி குழுவை அமைத்துள்ளது.

பல உண்மைகள்
அந்த ஹவாய் போனில் தகவல்கள் அழிந்தது எப்படி, உண்மையில் பிரச்சனை காரணமாக அழிந்ததா இல்லை ஹேக் செய்யப்பட்டதா என்று விசாரிக்க உள்ளது. அந்த போனில் இருந்த விவரங்கள் வெளியாகும்பட்சத்தில் பல தலைகள் உருள வாய்ப்புள்ளது. இது ராஜபக்சே பதவி ஏற்றத்தில் கூட பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications