இலங்கை: 93 இடங்களுடன் ரணில் கட்சி முன்னிலை - ராஜபக்சேவின் பிரதமர் கனவு தவிடுபொடியானது!
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்கிமரசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய மக்கள் கட்சியானது 45.7% வாக்குகளுடன் 93 இடங்களைக் கைப்பற்றி முன்னிலை பெற்றது. முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியானது 42.4% வாக்குகளுடன் 83 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. இதனால் மீண்டும் பிரதமராக ரணில் தலைமையில் ஆட்சி அமைய உள்ளது. மகிந்த ராஜபக்சேவின் பிரதமர் கனவு தவிடுபொடியாகிவிட்டது.
225 இடங்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 196 எம்.பி.க்கள் மக்கள் வாக்களிப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்; எஞ்சிய 29 பேர் நியமன எம்.பி.க்களாவர்.
196 எம்.பிக்களைத் தேர்வு செய்வதற்காக தேர்தல் நேற்று நடைபெற்றது. தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
தற்போதைய நிலையில் முடிவுகள் விவரம்:
ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி: 93
மகிந்த ராஜபக்சேவை ஆதரிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி: 83
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு- 14
ஜே.வி.பி-4
ஈ.பி.டி.பி-1
மொனராகல மாவட்டம்
ராஜபக்சேவின் ஐ.ம.சு. மு- 3 இடங்கள்
ரணிலில் ஐ.தே.க - 2
அனுராதபுரம் மாவட்டம்
ஐ.ம.சு.மு - 5
ஐ.தே.க - 4
பதுளை மாவட்டம்
ரணிலின் ஐ.தே.க - 5 இடங்கள்
ஐ.ம.சு.மு - 3
காலே
ஐ.ம.சு.மு - 6
ஐ.தே.க - 4
பொலன்னறுவ மாவட்டம்
ஐ.தே.க - 3
ஐ.ம.சு.மு - 2
மாத்தறை மாவட்டம்
ஐ.ம.சு.மு- 5
ஐ.தே.க - 3
அம்பாந்தோட்டை மாவட்டம்
ஐ.ம.சு.மு - 4
ஐ.தே.க - 2
ஜேவிபி 1
மாத்தளை மாவட்டம்
ரணிலின் ஐ.தே.க - 3 இடங்கள்
ராஜபக்சேவின் ஐ.ம.சு.மு - 2 ஆசனங்கள்
களுத்துறை மாவட்டம்
ராஜபக்சேவின்ஐ.ம.சு.மு - - 5
ஐ.தே.க - 4
ஜேவிபி - 1
இரத்தினபுரி மாவட்டம்
ஐ.ம.சு.மு - 6 இடங்கள்
ஐ.தே.க - 5
நுவரெலிய மாவட்டம்
ரணிலின் ஐ.தே.க - 5 இடங்கள்
ராஜபக்சேவின் ஐ.ம.சு.மு - 3 இடங்கள்
கேகாலை மாவட்டம்
ஐ.தே.க - 5
ஐ.ம.சு.மு - 4
குருநாகல மாவட்டம்
ஐ.ம.சு.மு - 8
ஐ.தே.க - 7
புத்தளம் மாவட்டம்
ஐ.தே.க - 5
ஐ.ம.சு.மு - 3