எங்களது யுத்தம் தமிழினத்துக்கு எதிரானது அல்ல: சொல்வது ராஜபக்சே
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையில் நிகழ்ந்த யுத்தம் ஒருபோதும் தமிழ் இனத்துக்கு எதிரானது அல்ல...பயங்கரவாதத்துக்கு எதிரானதுதான் என்று அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார்.
இலங்கை தலைநகர் கொழும்பில் ராஜபக்சேவை ஆசிய வளர்ச்சி வங்கி தலைவர் நாகோவ் இன்று சந்தித்து பேசினார் .இந்த சந்திப்பின் போது 2009 ஆம் ஆண்டு யுத்தத்துக்குப் பின் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ராஜபக்சே விவரித்தார்.

அப்போதுதான், தாங்கள் நிகழ்த்தியது தமிழ் இனத்துக்கு எதிரான யுத்தம் அல்ல. பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தமே. போரினால் இடம்பெயர்ந்த அனைத்து மக்களும் மீளக் குடியேற்றப்பட்டுவிட்டனர் என்று ராஜபக்சே கூறியிருக்கிறார்.
மேலும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களை ஆசிய வளர்ச்சி வங்கி பார்வையிடலாம் என்றும் ராஜபக்சே அழைப்பு விடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications