இலங்கையில் ஒழிகிறது அதிபர் ஆட்சி- அரசியல் சாசன திருத்தத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல்!
கொழும்பு: இலங்கை அதிபரின் அதிகாரங்களைப் பெருமளவு குறைத்து அதிபர் ஆட்சியை அகற்ற வகை செய்யும் அரசியல் சாசன திருத்தத்தை மேற்கொள்வதற்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கையில் தற்போது அதிபருக்கு அதிகாரம் அளிக்கும் "நிறைவேற்று அதிகார' முறை நடைமுறையில் இருக்கிறது. அந்நாட்டின் பிரதமர் மற்றும் நாடாளுமன்றத்துக்கு அதிகாரங்கள் குறைவு.
அதிபர் தேர்தலின் போது நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட அதிபராட்சி முறைக்கு முற்றுப் புள்ளி வைப்போம் என்று மைத்ரிபால சிறிசேன உறுதியளித்திருந்தார்.

இதனடிப்படையில் அதிபருக்கு அதிக அதிகாரங்களை அளிக்கும் 19வது அரசியல் சாசன திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு நேற்று நடைபெற்ற இலங்கை அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்தது.
இதன் மூலம் இலங்கையில் அதிபர் ஆட்சி முறை நீக்கப்பட்டு, அதிபர் மற்றும் நாடாளுமன்றமும் சேர்ந்து நிர்வகிக்கும் ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்படும்.
அனைத்து தேர்தல்களிலும், விகிதாசார பிரதிநிதித்துவ முறை நீக்கப்பட்டு, தொகுதி ரீதியாக நேரடியாகவும், விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைப்படியும், பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் புதிய முறை அறிமுகப்படுத்தப்படும்.
ஒருவர் அதிகபட்சமாக இரண்டு ஆட்சிக்காலத்துக்கு மட்டுமே அதிபர் பதவியை வகிக்க முடியும் என்ற விதிமுறை மீண்டும் கொண்டு வரப்படுகிறது.
அதிபரின் ஒரு ஆட்சிக்காலம் ஆறு ஆண்டுகளில் இருந்து ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது. மேலும் ஒரு நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்த பின்னரே அதனைக் கலைக்கும் உரிமை மீண்டும் அதிபருக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications