நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உட்பட 16 ஈழத் தமிழர் அமைப்புகளுக்கு இலங்கை தடை!!

ஜெனிவாவில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியது. இந்த தீர்மானம் நிறைவேறியதால் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த உள்ளது.
இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்பதில் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர் அமைப்புகள் தீவிரம் காட்டின. தற்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில் ஆத்திரமடைந்துள்ள இலங்கை அரசு தமிழீழ விடுதலையை ஆதரித்து வெளிநாட்டில் இயங்கும் அத்தனை ஈழத் தமிழர் இயக்கங்களையும் ஒரு சேர தடை விதிக்க முடிவு செய்துள்ளது.
16 ஈழத் தமிழர் அமைப்புகள்
இலங்கை அரசால் வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகள் என்ற பட்டியலில் இடம்பெற இருக்கும் அமைப்புகள்:
1.தமிழீழ விடுதலைப் புலிகள்
2. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (டி.ஆர்.ஓ)
3. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.
4. பிரித்தானியத் தமிழர் பேரவை.
5. உலகத் தமிழர் அமைப்பு.
6. கனேடிய தமிழ் காங்கிரஸ்.
7. ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ்.
8. உலகத் தமிழர் பேரவை.
9. தேசிய கனேடியத் தமிழர் பேரவை.
10. தமிழ்த் தேசிய பேரவை.
11. தமிழ் இளைஞர் இயக்கம்.
12. உலகத தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.
13. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்.
14. தமிழீழ மக்களவை.
15. உலகத் தமிழர் நிவாரண நிதியம்.
16. தலைமைச்செயலக குழு.
உருத்திரகுமாரன், நெடியவன்..
மேலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நெடியவன், உலகத் தமிழர் பேரவையின் பாதிரியார் இம்மானுவேல், விடுதலைப் புலிகளின் விநாயகம் ஆகியோரே இந்த அமைப்புகளை முன்னின்று நடத்துவதாகவும் இலங்கை அரசு அறிவிக்க இருக்கிறது.
இந்த அமைப்புகள் மற்றும் நிர்வாகிகள் மீது தடை விதிக்கப்பட்டால் அவற்றுடன் தொடர்பு வைத்து கொள்பவர்களும் நிதி உதவிகளை பெறுவோரும் இலங்கையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications