Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் நள்ளிரவுடன் ஓய்ந்தது.. வரும் திங்கட்கிழமை வாக்குப் பதிவு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு : இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நள்ளிரவுடன் ஓய்ந்தது. வரும் 17 ஆம் தேதி அங்கு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் ரணில் விக்கிரசிங்கேவிற்கும், மகிந்த ராஜபக்சேவிற்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.

srilanka flag

இலங்கையின் தேர்தல் நடத்தப்பட உள்ள 22 மாவட்டங்களில், 12,314 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குசாவடிகளில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இலங்கையில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 50 லட்சத்து 44,490 ஆகும். தேர்தலில் 6,151 பேர் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர்.

இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் முன்னாள் அதிபர் ராஜபக்சே, குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுகிறார். ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கே கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகிறார்.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் கட்சி வெற்றி பெற்றாலும், ராஜபட்சேவுக்கு பிரதமர் பதவி அளிக்கப்படாது என்று அதிபர் மைத்ரிபால சிறிசேனா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+