இலங்கை: பொருளாதார சிக்கலை ஒரு மாதத்தில் தீர்ப்பேன் என பைத்தியமே சொல்லும்.. நிதி அமைச்சர் அலி சப்ரி
கொழும்பு: இலங்கையின் பொருளாதார சிக்கலை ஒரே மாதத்தில் தீர்ப்பேன் என பைத்தியகாரர்கள்தான் சொல்ல முடியும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் அலி சப்ரி கூறினார்.
இலங்கையில் தலைவிரித்தாடும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று கோத்தபாய, மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்பது அந்நாட்டு மக்களின் கோரிக்கை. இதனை வலியுறுத்தி கடந்த 2 மாதங்களாக இலங்கை முழுவதும் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இலங்கை தலைநகர் கொழும்பு காலி முகத் திடலில் 25 நாட்களுக்கும் மேலாக பொதுமக்கள் இரவும் பகலுமாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்காக ஜனாதிபதி கோத்தபாய, பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானங்கள் நேற்று சபாநாயகரிடம் கொடுக்கப்பட்டன. இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு நடைபெறும்; அதற்கு முன்னதாக மகிந்த ராஜபக்சே பதவி விலகக் கூடும் என தகவல்கள் வெளியானதால் பெரும் பரபரப்பு நிலவியது.
இதனிடையே இன்று காலை இலங்கை நாடாளுமன்றம் கூடியது. அப்போது இலங்கை நிதி அமைச்சர் அலி சப்ரி பேசியதாவது: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்க்க சுமார் 2 ஆண்டுகளுக்கும் அதிகமாகும். 2 ஆண்டுகளில் இந்த பிரச்சினையை தீர்ப்பதா அல்லது 5 முதல் 10 ஆண்டுகள் வரை இதனை நீடிப்பதா என்பது நம் கையில்தான் உள்ளது. இலங்கையின் தற்போதைய வௌிநாட்டு பணப்புழக்கம் 50 மில்லியன் அமெரிக்க டாலர் கூட இல்லை. நாட்டில் வரிகளை அதிகரிக்க வேண்டிய காலத்தில் நாம் அதனை குறைத்து பிழை செய்துவிட்டோம். அரசாங்கத்தின் வரி வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தில் 8.7 % என குறைந்துள்ளது. இதனால் விரைவில் புதிய வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்ய இருக்கிறோம்.
இதனூடாக வருமான வரியை அதிகரிக்க எதிர்ப்பார்த்துள்ளோம்.
தற்போதைய அச்சுறுத்தலில் இருந்து விடுபட அனைவருக்கும் தேசிய பொறுப்பு உள்ளது. நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள வரிக் கொள்கையை முன்னெடுத்துச் செல்ல முடியுமா என்பது கேள்விக்குறி. சுற்றுலாத்துறையின் சரிவு, எண்ணெய் விலை உயர்வு, சர்வதேச நாணய நிதியத்தில் சேராதது உள்ளிட்ட பல காரணிகள் வெளிநாட்டு கையிருப்பு இழப்புக்கு காரணமாகிவிட்டது. சர்வதேச நாணயநிதியத்தில் முன்னரே சேர்ந்திருக்க வேண்டும்.
கடந்த காலங்களில் குவிந்த பிரச்சினைகள் இப்போது வெடித்துச் சிதறியுள்ளதுடன், இவை இலங்கையர்களின் அன்றாட வாழ்க்கையை
சீர்குலைத்துள்ளது மட்டுமன்றி பரவலான பொது அதிருப்தியின்மைக்கும்; சமூக அமைதியின்மைக்கும் வழிவத்துள்ளது. அண்மைக் காலத்தில் அரசிறைத் துறையின் செயலாற்றுகைக்கு விதிவிலக்கான குறைந்த அரசாங்க வருவாய், கடுமையான மீண்டெழும் செலவினம்;, அதிக வரவுசெலவு திட்டப் பற்றாக்குறை மற்றும் இப்போது நீடிக்கமுடியாதுள்ள திரட்சியுற்ற கடன் ஆகியவை செல்வாக்கு செலுத்தியுள்ளன. பலவீனமான அரசிறை நிலைமையானது, கடன் மதிப்பீடு குறைப்பு, சர்வதேச மூலதனச் சந்தைகளுக்கான அணுகல் இழப்பு மற்றும் வெளிநாட்டு நிதியுதவி ஆகியவற்றில்
வெளிப்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக, அரசாங்கம் மத்திய வங்கியின் பண நிதியுதவி உட்பட வரவு செலவுத் திட்டத்திற்கான உள்நாட்டு நிதியுதவியில் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளதோடு, இது குறிப்பிடத்தக்க பேரண்டப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கும் வழிவகுத்துள்ளது.
கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, வெளித்துறை அழுத்தத்தைக் குறைக்க விதிக்கப்பட்ட இறக்குமதிக் கட்டுப்பாடுகள் மற்றும் மிக முக்கியமாக 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட மிகக் குறைந்த வரி விதிப்பு மற்றும் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொவிட்-19 தொடர்பான தளர்வு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசின் வருவாய் வெகுவாகக் குறைந்துள்ளது.
அரசாங்க செலவினங்களில் ஒழுங்கமைப்புத் தேவையான பல அம்சங்கள் உள்ளன. உற்பத்தித்திறனற்ற அரசாங்க மானியம் மற்றும் கையூட்டுகளின் கலாச்சாரம் இனி சாத்தியமில்லை. மாறாக, ஒரு நிலையான பேரண்டப்-பொருளாதாரச் சூழலானது, தேவையான சமூகப் பாதுகாப்பு
வழிமுறைகளுடன் குடிமக்கள் செழிக்க அதிகாரமளிப்பதுடன் நிலையானதும் மற்றும் பேண்தகுநிலையுடையதுமான பொருளாதார விளைவை ஏற்படுத்தும். இந்த இக்கட்டான நேரத்தில் தேவையான கொள்கை மறுசீரமைப்புக்களைச் செயல்படுத்தத் தவறினால், விளைவு பாரதூரமானதாக அமையும். கடந்த மாதங்களில் இந்தச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தத் தவறியதன் பாதகமான பெறுபேறுகளை இலங்கை ஏற்கனவே
அனுபவித்துள்ளது. எனவே, இந்த கொந்தளிப்பான சூழ்நிலையை நீண்டகாலமாக நிலவும் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், எதிர்கால சந்ததியினருக்கு நவீன மற்றும் வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு வலுவான அடித்தளத்தை அமைப்பதற்கும், கடினமான ஆனால் மிகவும் தேவையான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பாக இலங்கை பயன்படுத்துவது இன்றியமையாததாகும். இவ்வாறு அலி சப்ரி பேசினார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் அலி சப்ரி ஆற்றிய உரையின் தமிழாக்கம்:
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications