இலங்கையை 2 மாநிலங்களாக பிரிக்க வேண்டும்- கூட்டாட்சி முறை அவசியம்.... வடக்கு மாகாண சபை பரிந்துரை
Subscribe to Oneindia Tamil
யாழ்ப்பாணம்: இலங்கையை வடக்கு கிழக்கு மற்றும் சிங்கள மாநிலங்கள் என இரண்டாகப் பிரிக்க வேண்டும்; வடகிழக்கில் முஸ்லிம்களுக்கும் சிங்கள மாநிலத்தில் மலையக் தமிழர்களுக்கும் தன்னாட்சி பிராந்திய சபைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று தமிழர்கள் வாழும் வடக்கு மாகாண சபை பரிந்துரைத்துள்ளது.
இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட இருக்கிறது. இந்த புதிய அரசியல் அமைப்பில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து வடக்கு மாகாண சபையில் முதல்வர் வின்கேஸ்வரன் முன்வைத்த அம்சங்கள்:

- இலங்கையில் ஒற்றையாட்சிக்கு பதிலாக கூட்டாட்சி முறை அமுல்படுத்தப்பட வேண்டும்.
- இலங்கை குடிமகன் ஒருவர் மற்றுமொருவருக்கு கீழானவர் என்ற முறை மாற்றப்பட வேண்டும்.
- எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருக்ககூடிய ஒரு இனம் மற்றைய இனத்தை விட அதிக பலன்களை கேட்க கூடாது.
- வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்கும் போது முஸ்லிம் தன்னாட்சி பிராந்திய சபை உருவாக்கப்படும்.
- சிங்கள மொழி மாநிலத்தில் மலையக தமிழர்களுக்காக ஒரு தன்னாட்சிய பிராந்திய சபை உருவாக்கப்பட வேண்டும்.
- வடக்கு, கிழக்கு மாநிலம், வடக்கு, கிழக்கு மாநில நாடாளுமன்றம், வடக்கு கிழக்கு முஸ்லிம் பிராந்திய சபை மற்றும் மலையக பிராந்திய சபை ஆகியவற்றுக்கு முழுமையான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்.
- தமிழ் பேசும் மாநில அரசில் மத்திய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுநர் என்ற ஒருவருக்கு முழுமையான அதிகாரம் இருக்ககூடாது.
- இலங்கையின் ஆட்சி மொழிகளாக சிங்களமும் தமிழுமாக இருக்க வேண்டும். ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும்.
- வடகிழக்கு மாநிலத்தின் நடவடிக்கைளும் சிங்கள மற்றும் ஆங்கில மொழி பெயர்ப்புடன் தமிழ் மொழியில் இருக்க வேண்டும்.
- மலையக பிராந்திய சபையின் பதிவுகள் தமிழிலோ சிங்களத்திலோ இடம்பெறலாம். அதில் தமிழ், சிங்கள, ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் இருக்க வேண்டும்.
- வடக்கு, கிழக்கு மாநில மற்றும் முஸ்லிம் மலையக தன்னாட்சி சபைகளின் சுயாட்சியானது கூட்டாட்சி அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.












Click it and Unblock the Notifications