இலங்கை சிறையில் இருந்து 5 தமிழ் மீனவருக்கு விடுதலை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய தமிழக மீனவர்கள் ஐந்து பேர் குற்றமற்றவர்கள் என தீர்ப்பளித்து விடுவித்தது இலங்கை நீதிமன்றம்.
போதைப்பொருள் கடத்தியதாக 2011ம் ஆண்டு நவம்பரில் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த 5 மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். வெலிங்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்த விசாரணையை கொழும்பு நீதிமன்றம் முடித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதி என்று தீர்ப்பளித்து நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து மீனவர்கள் ஐவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் உறவினர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications