இலங்கை ராணுவ கெடுபிடிகளுக்கு இடையே யாழில் உணர்வுப்பூர்வமாக மாவீரர் நாள்!!
யாழ்ப்பாணம்: இலங்கை ராணுவத்தின் கடும் கெடுபிடிகளுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலைக்காக உயிர் நீத்த மாவீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு நவம்பர் 27-ந் தேதி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வீரவணக்கம் செலுத்துவது வழக்கம். 2008ஆம் ஆண்டு வரை நவம்பர் 27-ந் தேதியன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மாவீரர்களுக்கு வீரவணக்க சுடரேற்றி உரையாற்றுவது வழக்கம்.

அதற்கு பின்னரும் உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் நாடுகளில் மாவீரர் நாள் எழுச்சியோடு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்குப் பகுதியில் இலங்கை ராணுவத்தின் தடைகளைத் தாண்டி மாவீரர் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இன்று யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் நண்பகல் 12 மணியளவில் மணி ஓசை எழுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாணவர்கள், பேராசிரியர்கள் ஒன்று திரண்டு தமிழீழ விடுதலைக்காக உயிரைக் கொடுத்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர். அப்போது இலங்கை ராணுவத்தினர் உள்ளே நுழைந்து அனைவரையும் புகைப்படம் எடுத்தனர். அதைப்பற்றி கவலைப்படாமல் உணர்வுப்பூர்வமாக அனைவரும் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

முன்னதாக இன்று காலை யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோயில் முன்பாக மாவீரர்களுக்கான நினைவுச் சுடரேற்றி வீரவணக்கம் செலுத்தினார் வடக்கு மாகாண சபை உறுப்பினரான சிவாஜிலிங்கம். இதனைத் தொடர்ந்து பெரிய தேவாலயம் சென்று அங்கு மெழுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தினார்.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications