For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுற்றுலா விசாவில் சென்று இலங்கையில் புடவை விற்ற தமிழக வியாபாரி கைது

Google Oneindia Tamil News

கொழும்பு: சுற்றுலா விசாவில் சென்று புடவை வியாபாரத்தில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த வியாபாரியை இலங்கைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முருகானந்தன் தினேஷ்குமார் (25). சுற்றுலா விசாவில் இலங்கை சென்ற தினேஷ், அங்கு புடவை வியாபாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

Tamil merchant arrested in Srilanka

இது தொடர்பாக தகவல் அறிந்த பருத்தித்துறை போலீசார், நாவலடிச் சந்திப் பகுதியில் வைத்து தினேஷைக் கைது செய்தனர். அப்போது தினேஷிடமிருந்து 59 சல்வார்களும் கைப்பற்றப் பட்டன.

தினேஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் சுற்றுலா விசாவில் வந்து இலங்கையில் சேலை, சுடிதார் உள்ளிட்ட துணிகளை வியாபாரம் செய்தது தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

English summary
A Tamil merchant arrested in Srilanka as he went their by tourist visa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X