இலங்கையில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: 70 பயணிகள் காயம்
கொழும்பு: இலங்கையில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 70 பேர் காயமடைந்தனர்.
கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில், குருநாகல் மாவட்டம் பொத்துஹெர ரயில் நிலையத்தில் வந்துகொண்டிருந்தபோது மாத்தறை நோக்கி சென்ற ரயில் மீது நேருக்கு நேர் மோதியது. இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் பல பெட்டிகள் தடம் புரண்டு பாதையின் இருபக்கமும் விழுந்தன.
ராணுவத்தினரும், காவல்துறையினரும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மொத்தம் 70 பயணிகள் காயமடைந்துள்ள நிலையில் அதில் 5பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு குருநாலக மற்றும் பொல்ஹாவெலெ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்தையடுத்து வடக்கிலிருந்து வரும் ரயில்கள் குருநாகலயிலும், தெற்கிலிருந்து செல்லும் பொல்ஹாவெல வரையிலுமே செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications