புலிகளின் தங்கம் தொடர்பான ஆவணங்கள் எரிப்பு? 310 டன் தங்கம் கள்ள சந்தையில் விற்பனை?
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் வசம் இருந்த தங்கம் மற்றும் பணத்தை இலங்கை ராணுவம் கைப்பற்றியது தொடர்பான ஆவணங்கள் எரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து இலங்கை இராணுவத்தால் தங்கம் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டது. இவற்றை இலங்கை அரசின் கருவூலத்துக்கு வழங்கியபோது இராணுவத்துடனான கடிதத் தொடர்பு பரிமாறப்பட்டது.

ஆனால் தற்போது இந்த கடிதங்கள் எரிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் பணம் தொடர்பான விவரங்கள் எதுவும் தெரியாமல் போய்விட்டது.
அண்மையில் அப்போதைய இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா, புலிகளிடம் இருந்து பணம் மற்றும் தங்கத்தை கைப்பற்றி ஒப்படைத்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.
அதேநேரத்தில் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றிய தங்கத்தில் 310 டன் தங்கத்தை சிலர் இரகசியமான முறையில் ஜப்பானுக்கு விற்பனை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications