Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யாழ். இணுவில் முருகன் கோவில் தைப்பூச திருவிழா – தேர் இழுத்து பக்தர்கள் கொண்டாட்டம்!

Subscribe to Oneindia Tamil

யாழ்ப்பாணம்: இலங்கை யாழ்ப்பாணத்தின் இணுவில்லில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க முருகன் திருக்கோவிலில் தைப்பூச திருநாளன்று அதிஉயரமான தேரானது பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

Yazhpanam murunagn temple celebrated Taipusam…

யாழ்ப்பாணம் நகரில் இருந்து 6.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இணுவில் கந்தசுவாமி கோவில். பிரபல தவில்-நாதஸ்வர கலைஞர்கள் மங்கல வாத்தியம் இசைக்க, கரகாட்ட கலைஞர்கள் தமது கலையினை வெளிப்படுத்த கந்தசுவாமியின் தேர் ஊர் கூடி இழுத்து வரப்பட்டது.

Yazhpanam murunagn temple celebrated Taipusam…

வள்ளி-தெய்வானை சமேதரராய் அத்திருத்தேரில் எழுந்தருள இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

Yazhpanam murunagn temple celebrated Taipusam…

இந்த கோவிலானது பெரிய சந்நியாசியார் என்று அழைக்கப்படும் ஆறுமுகம் சந்நியாசியார் அருள்பாலித்த இடம் ஆகும். இவரின் முயற்சியினால் உருவாக்கப்பட்டதே இந்த கோவிலின் திருத்தேர் ஆகும்.

Yazhpanam murunagn temple celebrated Taipusam…

தமிழ்நாட்டிலே தாம் கற்ற கலையாற்றலை வெளிப்படுத்துவதற்குச் சந்தர்ப்பம் கிடைக்காமல் காத்திருந்த சிற்ப வல்லுநர்களிடம் எம்பெருமான் சந்நியாசியார் வடிவில் சென்று இக்கந்தசாமி கோவிலுக்கு தேர் செய்ய வரும்படி கூறி அருளினார்.

Yazhpanam murunagn temple celebrated Taipusam…

1912ஆம் ஆண்டு இத்தேர்தல் உருவாக்கப்பட்டது. 35 அடி உயரமான இந்த தேருக்கு நான்கு சக்கரங்களும், மேலே ஐந்து கலசங்களும் பொருத்தப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+