கோவாக்சின் போடப்பட்ட பயணிகளுக்கு பயண கட்டுப்பாடுகள் நீக்கம்.. அறிவித்தது ஆஸ்திரேலியா!
சிட்னி: கோவாக்சின் போட்டுகொண்ட பயணிகளுக்கு ஆஸ்திரேலியாவில் பயண கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
உலகம் முழுக்க கொரோனாவிற்கு பின் பயண கட்டுப்பாடுகள், விசா கட்டுப்பாடுகள் அதிகம் ஆகியுள்ளது. பல நாடுகள் வெளிநாட்டு மக்களுக்கு பயண கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
முக்கியமாக வளரும் நாடுகளில் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு வேக்சின்களுக்கு வளர்ந்த நாடுகள் அனுமதி அளிப்பது இல்லை. அதிலும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பயன்படுத்தப்படும் வேக்சின்களுக்கு பல்வேறு உலக நாடுகள் அனுமதி அளிக்க மறுத்து வருகிறது.

யுகே
சமீபத்தில்தான் இரண்டு டோஸ் கோவிஷீல்ட் வேக்சின் அல்லது யு.கேவால் அங்கீகரிக்கப்பட்ட வேக்சின் போட்ட இந்தியர்கள் இனி யு.கேவில் தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியம் கிடையாது என்று யுனைட்டட் கிங்டம் தெரிவித்துள்ளது. பெரும் சர்ச்சைகளுக்கும், விவாதங்களுக்கும் பின் யு.கே இந்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த நிலையில் கோவாக்சின் போட்டுகொண்ட பயணிகளுக்கு ஆஸ்திரேலியாவில் பயண அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோவாக்சின்
இவர்கள் ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு முன் ஆஸ்திரேலியா செல்லும் மக்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்று கட்டாய விதி இருந்தது. அதன்பின் ஒவ்வொரு வேக்சினுக்கும் தனி தனியாக தனிமைப்படுத்துதல் விதிகள் தளர்த்தப்பட்டன. இந்த நிலையில் தற்போது கோவக்சினுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.
Recommended Video

2 டோஸ்
2 டோஸ் கோவாக்சின் போட்டவர்கள் இனி எளிதாக ஆஸ்திரேலியா செல்ல முடியும். ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் பலர் கல்லூரி படிப்புகளில் படித்து வருகிறார்கள். இதனால் அவர்கள் எளிதாக இனி பயணம் மேற்கொள்ள முடியும். இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டு இருக்கும் கோவாக்சின் வேக்சினுக்கு உலக சுகாதார மையம் இன்னும் அவசர அனுமதி வழங்கவில்லை.

அனுமதி எப்போது
இதுவரை 4 முறை சந்திப்பு கூட்டம் நடத்தியும் கோவாக்சினுக்கு அவசர அனுமதி கிடைக்கவில்லை. கோவாக்சின் குறித்து கூடுதல் விவரங்களை அளிக்க வேண்டும் என்று உலக சுகாதார மையம் கேட்டு வருகிறது. வரும் நவம்பர் 3ம் தேதி கோவாக்சின் தொடர்பான கடைசி ரிவ்யூ மீட்டிங் நடக்கும். இதில் பெரும்பாலும் கோவாக்சினுக்கு அனுமதி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications