Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவாக்சின் போடப்பட்ட பயணிகளுக்கு பயண கட்டுப்பாடுகள் நீக்கம்.. அறிவித்தது ஆஸ்திரேலியா!

Subscribe to Oneindia Tamil

சிட்னி: கோவாக்சின் போட்டுகொண்ட பயணிகளுக்கு ஆஸ்திரேலியாவில் பயண கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

உலகம் முழுக்க கொரோனாவிற்கு பின் பயண கட்டுப்பாடுகள், விசா கட்டுப்பாடுகள் அதிகம் ஆகியுள்ளது. பல நாடுகள் வெளிநாட்டு மக்களுக்கு பயண கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

முக்கியமாக வளரும் நாடுகளில் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு வேக்சின்களுக்கு வளர்ந்த நாடுகள் அனுமதி அளிப்பது இல்லை. அதிலும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பயன்படுத்தப்படும் வேக்சின்களுக்கு பல்வேறு உலக நாடுகள் அனுமதி அளிக்க மறுத்து வருகிறது.

யுகே

யுகே

சமீபத்தில்தான் இரண்டு டோஸ் கோவிஷீல்ட் வேக்சின் அல்லது யு.கேவால் அங்கீகரிக்கப்பட்ட வேக்சின் போட்ட இந்தியர்கள் இனி யு.கேவில் தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியம் கிடையாது என்று யுனைட்டட் கிங்டம் தெரிவித்துள்ளது. பெரும் சர்ச்சைகளுக்கும், விவாதங்களுக்கும் பின் யு.கே இந்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த நிலையில் கோவாக்சின் போட்டுகொண்ட பயணிகளுக்கு ஆஸ்திரேலியாவில் பயண அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோவாக்சின்

கோவாக்சின்

இவர்கள் ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு முன் ஆஸ்திரேலியா செல்லும் மக்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்று கட்டாய விதி இருந்தது. அதன்பின் ஒவ்வொரு வேக்சினுக்கும் தனி தனியாக தனிமைப்படுத்துதல் விதிகள் தளர்த்தப்பட்டன. இந்த நிலையில் தற்போது கோவக்சினுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.

Recommended Video

    COVAXIN, COVISHIELD தடுப்பூசி பயனளிக்குமா? | Dr. Dr.Shanthi ravindranath Explain | Oneindia Tamil
    2 டோஸ்

    2 டோஸ்

    2 டோஸ் கோவாக்சின் போட்டவர்கள் இனி எளிதாக ஆஸ்திரேலியா செல்ல முடியும். ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் பலர் கல்லூரி படிப்புகளில் படித்து வருகிறார்கள். இதனால் அவர்கள் எளிதாக இனி பயணம் மேற்கொள்ள முடியும். இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டு இருக்கும் கோவாக்சின் வேக்சினுக்கு உலக சுகாதார மையம் இன்னும் அவசர அனுமதி வழங்கவில்லை.

    அனுமதி எப்போது

    அனுமதி எப்போது

    இதுவரை 4 முறை சந்திப்பு கூட்டம் நடத்தியும் கோவாக்சினுக்கு அவசர அனுமதி கிடைக்கவில்லை. கோவாக்சின் குறித்து கூடுதல் விவரங்களை அளிக்க வேண்டும் என்று உலக சுகாதார மையம் கேட்டு வருகிறது. வரும் நவம்பர் 3ம் தேதி கோவாக்சின் தொடர்பான கடைசி ரிவ்யூ மீட்டிங் நடக்கும். இதில் பெரும்பாலும் கோவாக்சினுக்கு அனுமதி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+