யப்பா.. தினேஷ் கார்த்திக்.. என்ன இது? அப்படியே ஸ்டன் ஆகி நின்ற மைதானம்.. குழம்பிய ரசிகர்கள்!
சிட்னி: இந்தியா பாகிஸ்தான் இடையிலான டி 20 உலகக் கோப்பை போட்டியில் இன்று சுவாரசியமான சில சம்பவங்கள் நடைபெற்றன.
இந்தியா பாகிஸ்தான் இடையிலான டி 20 உலகக் கோப்பை போட்டி இன்று நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
இன்று ஆடும் இந்திய அணியில், கே. எல் ராகுல், கோலி, ரோஹித், சூர்யா குமார் யாதவ் ஆகியோர் கண்டிப்பாக ஆடுவார்கள். இதனால் இந்திய அணியில் பாகிஸ்தானுக்கு எதிராக கே. எல் ராகுல், கோலி, ரோஹித், சூர்யா குமார் யாதவ் , தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ஷமி, அஸ்வின், அக்சர், அர்ஷிதீப் சிங் மற்றும் புவனேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
இதையடுத்து முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.

தினேஷ் கார்த்திக்
இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் கீப்பிங் மிக சிறப்பாக இருந்தது. மூன்றாவது ஓவரிலேயே ரிஸ்வான் அடித்த பந்து ஒன்றை மிக சிறப்பாக அவர் தடுத்தார். அதேபோல் மற்ற நேரங்களிலும் தினேஷ் கார்த்திக் சிறப்பாக கீப்பிங் செய்தார். ஆனால் இன்று அவர் விக்கெட் கேட்காமல் அமைதியாகவே இருந்தது பலரையும் குழப்பியது. அதன்படி ஹர்திக் பாண்டியா 15.5வது ஓவரில் நவாஸ் அவுட் ஆனார்.

ஹர்திக்
ஹர்திக் போட்ட ஷார்ட் பந்தில் அவர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆனால் தினேஷ் கார்த்திக் விக்கெட் என்று கேட்கவே இல்லை. அதோடு அவர் மிகவும் அமைதியாக இருந்தார். பந்து பேட்ஸ்மேன் கிளவுஸில் பட்டு சென்றதால் பெரிதாக சத்தமும் கேட்கவில்லை. இதனால் உண்மையிலேயே விக்கெட் போனதா என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பினார்கள்.

விக்கெட்
விக்கெட் என்று நவாஸ் வெளியே சென்ற பின்புதான் அவர் அவுட் ஆனதே தெரிந்தது. இந்த விக்கெட்டிற்கு தினேஷ் பெரிதாக கொண்டாடவும் இல்லை. அடுத்த ஓவரிலேயே அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் ஆசிப் அலி அவுட் ஆனார். அப்போதும் அவர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆனால் தினேஷ் கார்த்திக் விக்கெட் என்று கேட்கவே இல்லை. அதோடு அவர் மிகவும் அமைதியாக இருந்தார்.

கத்துங்க பாஸ்
மீண்டும் அவர் விக்கெட்டை கொண்டாடாமல் அமைதியாக இருந்தார். இதனால் உண்மையிலேயே விக்கெட் போனதா என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பினார்கள். ஆனால் நடுவர்கள் விக்கெட் கொடுத்தனர். தினேஷ் கார்த்திக் இப்படி விக்கெட் கேட்காமல், கூலாக இருப்பது ரசிகர்களை குழப்பி உள்ளது. தினேஷ் கார்த்திக் இனிமேல் விக்கெட் விழுந்தால் கத்த வேண்டும். அவர் கொண்டாட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
-
இந்த ரெக்கார்டு போதுமா?இன்னும் கொஞ்சம் வேணுமா! பல ஆண்டு ரொக்கார்டுகளை சல்லி சல்லியாக உடைத்த SKY படை! -
வளைகுடா போர்.. விளக்கமளித்த ஜெய்சங்கர்! விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
எவ்வளவு அசிங்கப்பட்டாலும் திருந்தல.. இந்திய டீம் தோற்கணும்னு சொல்லி அடிவாங்கும் பாகிஸ்தான் அமீர் -
“ஒரு டான்ஸ் ஆடியது குத்தமா.. அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படும் இந்தியர்.. என்ன இப்படி ஆகிடுச்சு -
இந்தியாவுக்கு வெடி வைத்த டிரம்ப்! அமெரிக்காவால் நமக்கு தொட்டதெல்லாம் நஷ்டம் தான்! -
இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டி.. உலக கோப்பையை வெல்ல போவது யார்.. ஜோதிட கணிப்பு -
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில் -
ரஷ்ய எண்ணெய்யை வாங்க.. அனுமதி கொடுத்த அமெரிக்கா! பருத்தி மூட்டை குடோன்லையே இருந்திருக்கலாம்! -
இந்தியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு இருக்காது.. சரியான நேரத்தில் உள்ளே வந்த ரஷ்யா! அமெரிக்காவுக்கு செக் -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க












Click it and Unblock the Notifications