ஆப்கானில் 39 அப்பாவிகள் சுட்டுப் படுகொலை- போர்க்குற்றம் செய்த ஆஸி. வீரர்கள் மீது நடவடிக்கை
சிட்னி: ஆப்கானிஸ்தானில் 39 அப்பாவி பொதுமக்களை தங்களது நாட்டு ராணுவ வீரர்கள் சட்டவிரோதமாக சுட்டுப் படுகொலை செய்தது போர்க்குற்றம் என்றும் இதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் போர் நடவடிக்கையில் ஆஸ்திரேலியாவும் இடம்பெற்றிருந்தது. ஆஸ்திரேலியாவின் ராணுவ வீரர்கள் 2009- 2013-ம் ஆண்டு காலப் பகுதியில் 39 அப்பாவி பொதுமக்களை சட்டவிரோதமாக சுட்டுப் படுகொலை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது தொடர்பாக ஆஸ்திரேலியா ராணுவம் கடந்த 4 ஆண்டுகளாக மேஜர் ஜெனரல் நீதிபதி பால் பிரெட்டன் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது. தற்போது இந்த விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 39 பேரை சட்டவிரோதமாக ஆஸ்திரேலிய ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்த ராணுவ தளபதி ஆங்கஸ் கேம்பல்(Angus Campbell) வீரர்களின் செயல் வெட்கக் கேடானது என வருத்தம் தெரிவித்தார். தற்போதைய விசாரணையில் ஓய்வு பெற்ற மற்றும் பணியில் இருக்கும் 19 ராணுவ வீரர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. மொத்தம் 36 போர்க் குற்றங்கள் சுமத்தப்பட்டும் உள்ளன.
அத்துடன் விசாரணை அறிக்கையானது மொத்தம் 143 பரிந்துரைகளை அளித்துள்ளதாகவும் அதனை ஏற்றுக் கொள்வதாகவும் ராணுவ தளபதி கேம்பல் கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications