தீபாவளி கூட்டத்தை சமாளிக்க நெல்லை, கோவை, நாகர்கோவிலுக்கு பிரீமியம் சிறப்பு ரயில்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி நெரிசலை சமாளிக்க சிறப்பு ரயில்களை மட்டுமின்றி, பிரீமியம் சூப்பர் பாஸ்ட் ரயில்களையும் இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தீபாவளியை முன்னிட்டு தெற்கு ரயில்வே இயக்க உள்ள பிரீமியம் ரயில்களின் விவரம் வருமாறு:

1. எழும்பூர்-நெல்லை பிரீமியம் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில்: இந்த ரயில் (Train No.00609) 20.10.2014 அன்று, இரவு 9.05 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு நெல்லை வந்தடையும். ஒரு ஏசி இரண்டடுக்கு, 3 ஏசி மூன்றடுக்கு, 14 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இந்த ரயிலில் இணைக்கப்பட்டிருக்கும். திருச்சி, மதுரை, விருதுநகர், சாத்தூர் மற்றும் கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் இந்த ரயில் நின்று செல்லும்.

SOUTHERN RAILWAY INTRODUCE SPECIAL TRAINS FOR DEEPAVALI

இந்த ரயிலுக்கான முன்பதிவு 05.10.2014 அன்று, அதாவது நாளை தொடங்குகிறது.

2.எழும்பூர்-நாகர்கோவில் பிரீமியம் சூப்பர் பாஸ்ட் ரயில்: இந்த ரயில் எழும்பூரில் 21.10.2014 அன்று மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும். ஒரு ஏசி இரண்டடுக்கு, 3 ஏசி மூன்றடுக்கு, 14 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இந்த ரயிலில் இணைக்கப்பட்டிருக்கும். திருச்சி, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி மற்றும் நெல்லை ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் இந்த ரயில் நின்று செல்லும்.

இந்த ரயிலுக்கான முன்பதிவு 06.10.2014 அன்று துவங்குகிறது.

3. நாகர்கோவில்-எழும்பூர் பிரீமியம் சூப்பர் பாஸ்ட் ரயில்: இந்த ரயில் (Train No.00632) 23.10.2014 அன்று மாலை 5.05 மணிக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்தில் புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 6.05 மணிக்கு எழும்பூர் வந்தடையும். ஒரு ஏசி இரண்டடுக்கு, 3 ஏசி மூன்றடுக்கு, 14 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இந்த ரயிலில் இணைக்கப்பட்டிருக்கும். நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.

முன்பதிவு 08.102014ம்தேதி தொடங்குகிறது.

4. நெல்லை-எழும்பூர் பிரீமியம் சூப்பர் பாஸ்ட் ரயில்: ரயில் எண் (00672) 26.10.2014 அன்று, மாலை 6.15 மணிக்கு நெல்லையில் இருந்து கிளம்பி மறுநாள் காலை 7.15 மணிக்கு எழும்பூர் வந்தடையும். ஒரு ஏசி இரண்டடுக்கு, 3 ஏசி மூன்றடுக்கு, 14 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இந்த ரயிலில் இணைக்கப்பட்டிருக்கும். விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் மற்றும் விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.

ரயிலுக்கான முன்பதிவு 11.10.2014 அன்று தொடங்குகிறது.

5. சென்னை சென்ட்ரல்-கோவை பிரீமியம் சூப்பர் பாஸ்ட் ரயில்: இந்த ரயில் (No.00605) 20.10.2014 அன்று இரவு 9.50 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 5.10 மணிக்கு கோவை சென்று சேரும். ஒரு ஏசி இரண்டடுக்கு, 3 ஏசி மூன்றடுக்கு, 14 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இந்த ரயிலில் இணைக்கப்பட்டிருக்கும். காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.

05.10.2014 அன்று இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்குகிறது.

6. சென்னை சென்ட்ரல்-கோவை பிரீமியம் சூப்பர் பாஸ்ட் ரயில்: இந்த ரயில் (No.00605) 21.10.2014 அன்று சென்ட்ரலில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.10 மணிக்கு கோவை வந்தடையும். ஒரு ஏசி இரண்டடுக்கு, 3 ஏசி மூன்றடுக்கு, 14 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இந்த ரயிலில் இணைக்கப்பட்டிருக்கும். காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.

06.10.2014 அன்று இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்குகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+