வெளுவெளுவென வெளுத்துக் கட்டி முதல்வர் ஓ.பி.எஸ்.க்கு மு.க.ஸ்டாலின் பகிரங்க கடிதம்!
சென்னை: தமிழக நிதி நிலைமையை அறிந்து கொள்ள முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் தமிழக அரசு நோய்வாய்பட்டு ஐ.சி.யூ.வி. இருப்பதாகவும் ஸ்டாலின் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஸ்டாலின் எழுதிய கடிதம்:
தமிழகத்தைச் சூழ்ந்துள்ள தற்போதைய நிலைமைகள் குறித்து உங்களுடைய கவனத்திற்குக் கொண்டு வரவே இந்தக் கடிதத்தை அனுப்புகிறேன்.

நீங்களும், உங்கள் அமைச்சரவை சகாக்களும், சிறிதும் கவலைப்படாமலும் அறியாமலும் இருக்கும் தமிழகத்தின் யதார்த்த நிலைகள் பற்றி தான் இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன்.
மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் தொழில் தொடங்க ஆர்வத்துடன் நம் மாநிலத்தை நோக்கி அணி அணியாக வந்த காலம் ஒன்று இருந்தது. அப்போது தமிழகம் ஆற்றல் நிறைந்ததாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும், தொழில்நேயம் கொண்டதாகவும் திகழ்ந்தது.
ஆனால், இன்றைக்கோ தமிழகம் மிகுந்த நோய்வாய்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) கவலைக்கிடமாகக் கிடத்தப்பட்டு இருக்கிறது.
நாட்டிலேயே அதிகமான தொழில் முதலீடுகளைப் பெறும் முதல் மூன்று மாநிலங்கள் பட்டியலில் இருந்த தமிழகம் இப்போது, விட்டால் போதும் என்று கம்பெனிகள் ஓடி ஒளியும் முதல் மூன்று மாநிலங்களுள் ஒன்றாகி விட்டது.












Click it and Unblock the Notifications