செயல் இழந்தது மாயமான டோர்னியரின் கருப்பு பெட்டி..விமானியின் தந்தை கேள்வி கேட்டு பிரதமருக்கு கடிதம்..
சென்னை: மாயமான ‘டோர்னியர்' விமானத்தின் கருப்பு பெட்டி செயல் இழந்ததையடுத்து, விமானி சோனியின் தந்தை விமானத்தை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னையில் இருந்து கடந்த மாதம் 8-ந் தேதி புறப்பட்டுச் சென்ற இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ‘டோர்னியர்' விமானம் 3 பேருடன் மாயமானது. விமானத்தில் இருந்த விமானி வித்யாசாகர், துணை விமானி எம்.கே.சோனி மற்றும் கடலோர காவல்படை அதிகாரி சுபாஷ் சுரேஷ் ஆகியோர் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

விமானம் விழுந்ததாக கூறப்படும் சிதம்பரம் கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படை கப்பல்களும், இந்திய கப்பல் படையின் கப்பல்கள் மற்றும் விமானங்களும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. நேற்றுடன் (புதன்கிழமை) விமானம் காணாமல்போய் ஒரு மாதம் ஆகிறது. ஆனால் தேடுதல் பணியில் எந்த முன்னேற்றமும் இல்லை.
மாயமான விமானத்தில் பயணம் செய்த விமானிகளின் குடும்பத்தினர் மத்திய அரசுக்கும், ராணுவ அமைச்சகத்துக்கும் கடிதங்கள் மூலம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த விமானத்தை இயக்கிய துணை விமானி எம்.கே.சோனியின் தந்தை ரதீஷாம் சோனி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நாட்டுக்காக சேவை செய்யச் சென்ற என்னுடைய மகன் கடலோர காவல்படைக்கு சொந்தமான விமானத்துடன் மாயமாகி ஒரு மாதமாகிறது. மகனை இழந்து தவிக்கும் குடும்பத்தினர் அனைவரும் ஒவ்வொரு நிமிடமும் செத்துவருகிறோம். மாயமான விமானத்தை கண்டுப்பிடிக்க வெளிநாடுகளின் உதவியைக்கூட கேட்டு பெறலாம்.
நாங்கள் கேட்க விரும்பும் 3 கேள்விகள்,
1. விமானம் மாயமாகி 30 நாட்கள் ஆகிறது, இதுவரை என்ன செய்தீர்கள்? இனி என்ன செய்யப்போகிறீர்கள்?
2. விமானத்தை தேடுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் உரிய கருவிகள் நம்மிடம் உள்ளதா? அடுத்து இதுபோன்று ஒரு விமானம் மாயமானால் என்ன செய்வீர்கள்? என்பதை வெளிப்படையாக கூறுங்கள்.
3. கடற்படையில் இனி பணிக்கு சேரலாமா? வேண்டாமா? அவ்வாறு பணிக்கு சேர்ந்து இதுபோன்று விமானம் மாயமானால், அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது தான் நீங்கள் எங்களுக்கு அளிக்கும் பரிசா?
மாயமான விமானத்தை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கான உரிய நடவடிக்கையை இனியும் தாமதிக்காமல் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
மாயமான விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டியில் இருந்து வந்த அதிர்வுகளை வைத்து சிதம்பரம் அருகே கடலில் விழுந்து இருக்கலாம் என்று கண்டறிந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. அந்த கருப்பு பெட்டி ஒரு மாதம் மட்டுமே செயல்படும் திறன் கொண்டது.
விமானம் மாயமாகி 30 நாட்கள் ஆகிவிட்டதால் கருப்பு பெட்டி முற்றிலும் செயலிழந்துவிட்டது. இதனால் கருப்பு பெட்டியில் இருந்து வரும் அதிர்வுகள் உதவியுடன் விமானத்தை கண்டுபிடிப்பதில் கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் ‘‘சீஸ் மேட்டிக்'' என்ற நவீன தொழில்நுட்பம் மூலம் மாயமான விமானத்தை தேடும் பணியை தொடங்க வேண்டும் என்று விமானிகளின் குடும்பத்தினர், மத்திய அரசுக்கும், ராணுவ அமைச்சகத்துக்கும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து பரிசீலித்து வருவதாக கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications