அதிமுக அணிகள் இணைப்பை தாமதப்படுத்திய 10 விஷயங்கள் இதுதான்!
அதிமுக அணிகள் இணைப்பை தாமதப்படுத்திய 10 விஷயங்கள் இதுதான்.
Recommended Video

சென்னை: அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைப்பை தாமதப்படுத்திய 10 விஷயங்கள் இவைதான்...
டெல்லி செல்வாக்கு மூலம் சசிகலாவை தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையத்திடம் இருந்து அறிவிப்பு வெளியிட செய்ய வேண்டும் என்றது ஓபிஎஸ் தரப்பு. டெல்லியோ முதலில் இரு அணிகளும் இணையுங்கள்... சசிகலா தகுதி நீக்கம் மட்டுமல்ல இரட்டை இலையும் கிடைக்கும் என்றது.
டெல்லி கைவிரித்த நிலையில் தினகரனை நீக்கியது போல சசிகலாவை நீக்குங்கள் என்றது ஓபிஎஸ் தரப்பு. எடப்பாடி தரப்போ, நீங்களும் தலைமை கழகம் வாங்க... சேர்ந்து நீக்கலாம் என்று கூறியது.

பி பார்ம் விவகாரம்
பொதுச்செயலர் பதவி இல்லாத நிலையில் தேர்தல் காலங்களில் பி பார்ம் படிவத்தில் யாருக்கு கையெழுத்திடும் அதிகாரம் என கேட்டது ஓபிஎஸ் தரப்பு. ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே கையெழுத்திடலாம் என கூறியது எடப்பாடி தரப்பு. தேர்தல் காலங்களில் பி பார்மில் இருவர் கையெழுத்து போடுவதை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிடும் என்பது கூடவா உங்களுக்கு தெரியாது என சொன்னது ஓபிஎஸ் அணி.

கட்சி, வாரியம்
தங்களது பக்கம் இருக்கும் பெரும்பாலானோருக்கு கட்சி, வாரிய பதவிகள் வேண்டும் என கேட்டது ஓபிஎஸ் அணி. உதாரணமாக 25 வாரியங்கள் இருக்கிறது எனில் 15 தங்களுக்கு என வலியுறுத்தியது ஓபிஎஸ் தரப்பு.

ரொம்ப தயக்கம்
மாவட்ட நிலவரங்களை கவனத்தில் கொண்டு கட்சி, வாரிய பதவிகளை பகிர்ந்து தருவதில் எடப்பாடி தரப்பு ரொம்பவே தயக்கம் காட்டியது. அத்துடன் இப்படியெல்லாம் செய்தால் எங்களுக்குள் கலகம் வந்துவிடும் என ரொம்பவே யோசித்தது எடப்பாடி தரப்பு.

சீனியருக்கு ரெட் சிக்னல்
ஓபிஎஸ் அணியில் சீனியர் ஒருவர் அமைச்சர் பதவி கேட்டு அட்டம்பிடித்தார். ஆனால் அவருக்கு மட்டும் அமைச்சர் பதவி உறுதியாக இல்லை என ரெட் சிக்னலை கெட்டியாக காட்டியது எடப்பாடி தரப்பு.
இதுதான் அதிமுக அணிகள் இணைப்பை தாமதப்படுத்திய விஷயங்கள்..












Click it and Unblock the Notifications