கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு 1000 சிறப்புப் பேருந்துகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, நாளை சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சுமார் ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 10 நாட்கள் நடைபெருகிறது. அதன் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நாளை மாலை 6 மணியளவில் மலை உச்சியில் நடைபெறுகிறது.

திருவண்ணாமலை மகாதீபத்தைக் காண செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து மட்டும் சுமார் 1000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்புப் பேருந்துகள் இன்று மாலை முதலே இயக்கப்படுகிறது.அதேபோல, கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், சென்னை சென்ட்ரல்-திருவண்ணாமலை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications