மதுரையில் பச்சிளம் குழந்தை ரூ.5 லட்சத்துக்கு விற்பனை? டாக்டர் உள்பட 6 பேர் கைது
மதுரை: மதுரையில் பிறந்து 11 நாட்களே ஆன ஆண் குழந்தையை விற்க முயன்றதாக கூறி 6 பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.
மதுரையில் முடக்காத்தான் பகுதியில் பிறந்து 11 நாட்களே ஆன குழந்தை ஒன்று ரூ.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே கூடல் நகர் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், மதுரை அண்ணாநகர் பகுதியில் செயல்பட்டுவரும் கோல்டன் முதியோர் இல்லம் என்ற தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும், கவிதா என்னும் மாற்றுத் திறனாளி பெண்ணை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து, கடத்தப்பட்டதாக கூறப்படும் அந்த ஆண் குழந்தையை போலீஸார் மீட்டனர்.
அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையின் பேரில் அந்த தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சித்ரா பாய், அவரின் தம்பி பிரபாகர், தனியார் மருத்துவமனையின் மருத்துவர் சாந்தி, அவருடைய கணவர் ராஜசேகர் உள்ளிட்ட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதன் பின்னணி என்ன என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முன்னதாக, கடந்த 11-ந் தேதி மதுரை முடக்காத்தான் பகுதியில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த குழந்தையை மருத்துவமனையிலேயே பெற்றோர் விட்டுச் சென்றதாக தெரிகிறது. இதையடுத்து, அந்த குழந்தையை எடுத்த மருத்துவர் சாந்தி, தொண்டு நிறுவனத்திடம் குழந்தையை ஒப்படைத்துள்ளார் என கூறப்படுகிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications