11 மாதங்களில் 11 ஆதரவற்ற பச்சிளம் குழந்தைகள் மீட்பு - அதிர்ச்சி தரும் கோவை!
கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த 11 மாதத்தில் ஆதரவற்ற நிலையில் கிடந்த 11 பச்சிளம் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம், காளப்பட்டியிலிருந்து சரவணம்பட்டிக்கு செல்லும் வழியில் இருந்த காலி இடத்தில் ஆதரவற்ற நிலையில் கிடத்தபட்டிருந்த பெண் குழந்தை ஒன்று இருந்ததை கண்ட அவ்வழியாக சென்ற பொதுமக்கள் குழந்தைகள் பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற அலுவலர்கள் குழந்தையை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பிறந்த சில மணி நேரமே ஆன நிலையில் அக்குழந்தையை அதன் தாய் விட்டுச்சென்றது தெரியவந்தது.
சிகிச்சைக்குப்பின், குழந்தை நல்ல நிலையில் இருந்ததை தொடர்ந்து, குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி விஜயா முன்னிலையில் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் இருப்பிட மருத்துவ அலுவலர் டாக்டர் சௌந்தரவேல் அந்தக் குழந்தையை கிணத்துக்கடவு குழந்தைகள் காப்பக நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்.
கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை, கோவை மாநகரப்பகுதியில் 5 ஆண் குழந்தையும், 6 பெண் குழந்தையும் ஆதரவற்ற நிலையில் மீட்கப்பட்டு தனியார் காப்பகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications