பி.ஆர்.பி கிரானைட் நிறுவனம் மீது கொட்டும் புகார்கள் – மேலும் 11 வழக்குகள் பதிவு
மதுரை: கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக சகாயம் குழு பரிந்துரைத்த புகார்களின் அடிப்படையில் பி.ஆர்.பி கிரானைட் நிறுவனம் மீது மேலும் 11 வழக்குகள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதன்படி திருவாதவூர் மற்றும் கீழையூர் பகுதிகளில் நிலங்களை மோசடியாகப் பதிவு செய்தது மற்றும் வாங்கிய நிலத்துக்குப் பணம் தராமல் மோசடி செய்தது உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக பி.ஆர்.பி கிரானைட் நிறுவனம் மீது கீழவளவு மற்றும் ஒத்தக்கடை காவல் நிலையங்களில் தலா ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஒத்தக்கடையை அடுத்த புதுதாமரைப்பட்டி ஜான்கிட் நகரில் காவலர் குடியிருப்புகள் மற்றும் குண்டாங்கல் ஆதிதிராவிடர் காலனி குடியிருப்புகளை மிரட்டி வாங்கியது, ஆக்கிரமிப்பு செய்தது என பி.ஆர்.பி கிரானைட் நிறுவனம் மீது ஒத்தக்கடை காவல் நிலையத்தில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சகாயம் குழு பரிந்துரைத்த புகார்களின் அடிப்படையில் கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக மேலூர் காவல் நிலையத்தில் 41 வழக்குகள், ஒத்தக்கடை காவல் நிலையத்தில் 30 வழக்குகள் என இதுவரை மொத்தம் 71 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications