நீரில் மூழ்கி இறந்த சிறுவனின் கண்கள் தானம்..தென்காசி அருகே நெகிழ்ச்சிச் சம்பவம்
தென்காசி: தென்காசி அருகே நீரில் மூழ்கி இறந்த சிறுவனின் கண்கள் தானமாக தரப்பட்ட சம்பவம் பலரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ளது கீழப்பாவூர். இங்குள்ள ராஜேஸ்வரி தெருவை சேர்ந்த வைகுண்டராஜ் என்பவரது மகன் முத்துச்செல்வன் (11). இவன் பாவூர்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான்.

சிலதினங்களுக்கு முன் முத்துசெல்வன் தனது நண்பர்களுடன் அருகில் உள்ள ஊரணியில் குழிப்பதற்காக சென்றுள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்குள் சென்று தண்ணீரில் சிக்கிக்கொண்ட முத்துச்செல்வன் வெளியே வரமுடியாமல் மூழ்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.
அப்போது அந்த ஊரணியில் குளித்துக்கொண்டிருந்த மற்ற நபர்கள் முத்துச்செல்வனை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முத்துசெல்வன் பரிதாபமாக இறந்தான்.
இதுபற்றி தகவல் அறிந்த பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தினர் மற்றும் கண்தான விழிப்புணர்வு குழுவினர் இறந்த முத்துசெல்வனின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து அவனது தந்தை வைகுண்டராஜை சந்தித்து சிறுவனது கண்களை தானமாக வழங்கினால் இறந்த உங்கள் மகனின் கண்கள் வாழும் என்று கூறினர். இதனை ஏற்ற வைகுண்டராஜ் தனது மகன் இறந்த கொடூமையான நிலையிலும் அவனது கண்களை தானமாக வழங்க ஒப்புக்கொண்டார்.
இதனை தொடர்ந்து நெல்லை கண் மருத்துவமனைமருத்துவர்கள் விரைந்து வந்து மாணவன் முத்துசெல்வனின் கண்களை தானமாக பெற்று சென்றனர். இறந்த மாணவனின் கண்களை தானமாக வழங்கிய மாணவனின் தந்தை வைகுண்டராஜை மருத்துவர்கள் மற்றும் அனைவரும் பாராட்டினர்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications