ஹோமோ செக்ஸ்க்கு மறுப்பு: 6ம் வகுப்பு மாணவனைக் கொன்ற 10ம் வகுப்பு மாணவன் கைது
திண்டுக்கல்: ஓரினச்சேர்க்கைக்கு ஒத்துழைக்காமல், அசிரியரிடம் கூறி விடுவதாக மிரட்டிய 6ம் வகுப்பு மாணவனை கொடூரமாக கழிவு நீர்த் தொட்டியில் தள்ளி கொலை செய்த 10ம் வகுப்பு பயிலும் மாணவனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி ராஜாஜி சாலை கொண்டம்மன் சாலையை சேர்ந்த கூலித் தொழிலாளி கருணாகரனின் மகன் 11 வயது ஹரிபிரசாத். இவன் விடுதியில் தங்கி திண்டுக்கல் அருகேயுள்ள ம.மு.கோவிலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில் கடந்த 7-ந்தேதி காலை விடுதி அறையில் இருந்து மாணவன் தனது நண்பர்களுடன் வெளியில் சென்ற ஹரிபிரசாத், பின்னர் விடுதி திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. மகனைக் காணவில்லை என அவனது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் ஹரியைத் தேடி வந்தனர்.
இதற்கிடையே பள்ளிக்கூட விடுதியின் கழிப்பறை அருகில் உள்ள கழிநீர் தொட்டியில் ஹரிபிரசாத்தின் உடல் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து மாணவன் ஹரிபிரசாத்தின் நெருங்கிய நண்பர்களிடமும், மற்றும் அவன் காணாமல் போன அன்று யாருடன் கடைசியாக வெளியே சென்றான் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது, ஹரியின் விடுதியில் தங்கி இருந்த திண்டுக்கல் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 10 வகுப்பு பயிலும் 15 வயது மாணவன் முண்ணுக்குப் பின் முரணான தகவல்களை அளிக்கவே, சந்தேகமடைந்தனர் போலீசார்.
மேற்கொண்டு அவனிடம் நடத்திய விசாரணையில் அம்மாணவன் அடிக்கடி கட்டாயப் படுத்தி ஹரியுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதும், சம்பவத்தன்று ஹரி ஓரினச்சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஆசிரியரிடம் கூறி விடுவதாக மிரட்டியதும் தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து, ஆத்திரத்தில் ஹரியை பள்ளியில் உள்ள கழவுநீர் தொட்டியில் தள்ளி கொலை செய்ததை அம்மாணவன் ஒப்புக் கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனையடுத்து அம்மாணவனை, தாலுகா போலீசார் கைது செய்தனர்.
ஓரினச்சேர்க்கைக்கு சம்மதிக்காததால் 11 வயது மாணவனை மற்றொரு மாணவனே கொலை செய்தது கேள்விப்பட்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
-
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications