சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் வீடு புகுந்து 150 சவரன் நகைகள் கொள்ளை
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் 150 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் வீடு புகுந்து பீரோவில் இருந்த 150 சவரன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
சென்னை ஈக்காட்டுத்தாங்கலை சேர்ந்தவர் அலமேலு. இவர் இன்றைய தினம் சொத்து வரி கட்டுவதற்காக வெளியே சென்றிருந்தார்.

வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்குள் சென்ற போது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ஈக்காட்டுத்தாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில் வீட்டில் பீரோவில் வைத்திருந்த 200 சவரன் நகைகளில் 150 சவரன் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் புகார் அளித்தார். கைரேகை நிபுணர்களை கொண்டு சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications