மே 4 முதல் வியர்த்துக் கொட்டும், வெப்பம் அதிகரிக்கும்... கத்திரி வருது, உஷார்...!
சென்னை: தமிழகத்தில் கத்திரி வெயில் காலம் எனப்படும் அக்னி நட்சத்திரம் வரும் மே 4ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கத்திரி வெயில் அல்லது அக்னி நட்சத்திர காலமானது இது மே 29ஆம் தேதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை, அக்னி நட்சத்திர காலத்தின்போது தமிழகத்தில் வெப்பநிலை 110 டிகிரிவரை பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட்டெரிக்கும் சூரியன்
அக்னிநட்சத்திரம் காலம் தொடங்கும்முன்பே சுட்டெரிக்கும் தற்போது வெயிலை எண்ணி மக்களுக்கு வியர்க்கத் தொடங்கியுள்ளது.
ஆங்காங்கே மழை
இருப்பினும் தமிழகத்தின் முக்கிய பகுதிகள் மட்டுமின்றி பரவலாக திடீர் திடீர் என கோடைமழை பெய்து கொஞ்சம் சூட்டை குறைத்து குளிர்ச்சியை கொடுத்து செல்வதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஊட்டி, கொடைக்கானலுக்கு போகாதீங்க
இம்மழையின் காரணமாக ஊட்டி,கொடைக்கானல் போகும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. காரணம் அங்கு மழையில் போய் மாட்டிக் கொண்டு சரியாக சுற்றிப் பார்க்க முடியாது என்பதால்.
சோதிடத்தின்படி
ஜோதிடத்தின்படி சூரியன் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு நகர்ந்து செல்லும் காலம்தான் அக்னி நட்சத்திரமான கத்தரி வெயில் காலம் என்று கூறப்படுகிறது.
வெயில் அடிக்கும்.. மண்டை காயும்!
எது எப்படியோ..கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து, மண்டை காயும் அபாயத்திலிருந்து அவ்வப்போது வருண பகவான் மழையை பொழிய வைத்து காப்பாற்றினால் சரித்தான்.












Click it and Unblock the Notifications